News Ticker

Menu

விடுதலையை விலை பேசும் "சுமந்திரம்" - அரிச்சந்திரன்

தமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

விடுதலைப் போராட்டம் பாரிய சவாலை எதிர்கொண்டு பேரவலத்தை சந்தித்தபோதும் அதில் தப்பிபிழைத்த போராளிகளும் அதனோடு பயணித்த பொதுமக்களும் எப்போதுமே ஒரு உயரிய கட்டுக்கோப்பை பேணியே வாழ்ந்துவருகின்றார்கள்.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை வசை பாடிய சிறிலங்கா இராணுவத்தின் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் கூட விடுதலைப்புலிகளின் திறனை தவிர்க்கமுடியாமல் வியந்திருக்கிறார்கள்.



ஆனால் எமது தமிழர்களின் பிரதிநிதிகளோ தமிழர்களுடைய முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு தம்மாலான முயற்சிகளை அவ்வப்பபோது செய்துவருகின்றார்கள்.

குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரன் அதனை வெளிப்படையாக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்திவருகின்றார்.

அதிலும் காயமடைந்து போராட்டத்திற்காக தமது வாழ்வை தொலைத்து வாழ்வாதாரத்திற்கு ஏங்கி நிற்கும் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தையும் நெருக்கடிக்குள்ளாக்குவதில் மிகக்கவனம் எடுத்துவருகின்றார்.

சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பல்வேறு நரித்திட்டங்களுக்கு நடுவில் சிக்கிதவிக்கும் இப்போராளிகளின் வாழ்வை சீரழித்து அழிப்பதிலும் அப்படியான அழிவை தமிழர் சார்பாக நியாயப்படுத்துவதிலும் சுமந்திரன் தனது இராசதந்திர நுட்பத்தை தெளிவாக பயன்படுத்திவருகின்றார்.

கடந்த ஆண்டு சாவகச்சேரி பகுதியில் ஒரு தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை சுமந்திரனுக்கு இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் சுமந்திரனின் கையாளான கேசவன் சயந்தன் என்ற மாகாணசபை உறுப்பினர் ஊடாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.


பழைய சிங்களப் பத்திரிகை ஒன்றில் மடித்து மறைக்கப்பட்டிருந்த அந்த அங்கியைய சாட்டாக வைத்து வடக்கே பருத்தித்துறை தொடக்கம் கிழக்கே மட்டக்களப்பு வரை 65 இற்கும் மேற்பட்டோர் இரகசியமாக கைதுசெய்யப்பட்டனர்.

மக்களுக்கு பயப்பீதியை உருவாக்கும் நோக்குடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்ட இந்நடவடிக்கையில் சுமந்திரன் தரப்பு வேண்டுமென்றே உள்நுழைந்து கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் அபாண்டமான ஒரு குற்றசாட்டை முன்வைத்திருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களோ தற்கொலை அங்கி என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளோ அவர்கள் அனைவர் மீதும் பயத்தை உருவாக்கும் நோக்குடனே நடத்தப்பட்;டிருந்தது.

அப்படி கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுத்துறைக்காக வேலை செய்துகொண்டிருந்தவர்கள் என்பதைவிட வேலை செய்யவைக்கப்பட்டவர்கள் என்பது பொருத்தமானது.

இப்போது கனடாவிலிருந்து கட்டுக்கதைகளை உருவாக்கி எழுதுவதில் வல்லவரும்  தனது உறவினருமான டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக தன்மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட இருந்ததாகவும் அதில் தான் எப்படியோ தப்பிவிட்டதாகவும் இன்னொரு செய்தியை கசிய விட்டிருக்கின்றார் சுமந்திரன்.

சுமந்திரன் எப்படியான செய்தியை உருவாக்கி பரப்புகின்றார் என்பதனையும் அதன் பின்புலம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்துகொள்வதன் மூலமே தமிழர்கள் தமக்கு முன்னேயுள்ள ஆபத்துக்களை புரிந்துகொள்ளமுடியும்.

அவர் பரப்பிய அந்த செய்தி என்ன?

கிளிநொச்சியில் ஒருவரிடம் 5000 இலங்கை ருபாக்களை கொடுத்து தமிழீழக் கொடியை கடந்த மாவீரர் நாளில் ஏற்றுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலிகளால் சொல்லப்பட்டிருந்ததாம்.  அந்த காசை பெற்றுக்கொண்ட அந்நபர் அப்படியே அந்தக்கொடியை நவம்பர் 26 இரவு ஏற்றினாராம்.

அதன் பின்னர் ஒற்றைக் கையில்லாத ஒருவருடன் சேர்ந்து வந்த நபர் மிகமுக்கியமான தமிழ் அரசியல்வாதி ஒருவரை கிளைமோர் வைத்து கொல்லவேண்டும் என சொன்னார்களாம்.

அதற்கு அவர் அந்த கொல்லப்படவேண்டிய நபர் யாரென்று சொன்னால்தான் தான் அதனை செய்வேன் எனச் சொன்னாராம்.

அப்போது அவர்கள் அது சுமந்திரன் தான் எனச்சொன்னபோது அந்ந நல்ல மனுசனை கொல்லமுடியாது என்று பின்வாங்கி விட்டாராம். அதனை அவர் அப்படியே இராணுவ புலனாய்வுத்துறையிடம் சொல்லிவிட்டாராம்.

இதுதான் அந்தச்செய்தி.

இதன் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கிளைமோர் வைக்கப்பட்டபோதும் சாதுரியமாக சுமந்திரன் தப்பிவிட்டார் என்றும் அப்படி கிளைமோர் வைத்தவர்களை படையினர் கைதுசெய்து விட்டார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டபோது கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அந்தச்செய்தி நீள்கின்றது.

இப்போது சுமந்திரன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்.

“What seems to be clear now is that some misguided former LTTE cadres living in the Island are being exploited by certain overseas elements through cash incentives to engage in acts of violence on Sri Lankan soil. We can’t be sure at this time whether this is an individual act targeting me or whether it is part of a more comprehensive design to revive the LTTE again. I am confident that the security agencies will probe this further and arrive at definite conclusions very soon”

“வெளிநாட்டு சக்திகள் ஊடாக முன்னாள் விடுதலைப் போராளிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. பணத்தை வழங்கி சிறிலங்கா மண்ணில் வன்முறையை தூண்ட வைக்கப்படுகின்றார்கள். இது ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான பிரமாண்டமான முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியா என்பதை எங்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் எமது பாதுகாப்பு படையினர் இதனை சரியாக விசாரணை செய்து முடிவை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”.</strong>

இதன் மூலம் சுமந்திரன் சொல்லவருவது என்ன?

தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எமது போராளிகளின் எதிர்கால வாழ்வை சிதைப்பதிலும் சிறிலங்கா படைத்துறையோடு இணைந்துநிற்கும் சுமந்திரனின் இத்திட்டத்தின் நோக்கம் என்ன?


இப்போது சுமந்திரனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவரது போக்குவரத்துக்கு சிறிலங்கா படைத்துறை உலங்குவானூர்தி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் புலிகள் இன்னமும் உள்ளார்கள் அவர்கள் வந்துவிடுவார்கள் எனவே எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய பல விடயங்களை நிறைவேற்றமுடியவில்லை.
ஏனென்றால் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே எங்களுக்கு அதிகநேரம் தேவைப்டுகின்றது என சிறிலங்கா அரசு சொல்லப் போகின்றது.

இதுதானே அந்த செய்தி.

- அரிச்சந்திரன் -

Share This:

No Comment to " விடுதலையை விலை பேசும் "சுமந்திரம்" - அரிச்சந்திரன் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM