News Ticker

Menu

சம்பந்தரின் இருமுகங்கள்: சாதிக்குமா? பாதிக்குமா?

சிறிலங்கா அரச கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்த பின் எதிர்க்கட்சிகளே இல்லாதநிலையில் வலிய நுழைக்கப்பட்ட சம்பந்தர் சிறிலங்கா அரச கட்டமைப்பின்எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.

எதிர்க்கட்சி தலைவர் ஆன சம்பந்தர் தற்போது இரண்டு பாத்திரங்களைஏந்திக்கொண்டு திரிகின்றார். முதலாவதாக சிறிலங்கா என்ற நாட்டின் தலைவர்களில்ஒருவராக அதுவும் எதிர்க்கட்சித்தலைவராக செயற்படவேண்டிய நிலையில் உள்ளார். இரண்டாவதாக தமிழர் தரப்பின் தலைமைத்துவ பிரதிநிதியாக தமிழர்களின்தலைவராகவும் தன்னை காட்டிக்கொள்ளவேண்டிய நிலை அவருக்கு உள்ளது.



அண்ணளவாக 70 வீதத்திற்கு மேலான சனத்தொகையை கொண்ட இலங்கைத்தீவின்அரச கட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைமைத்துவ பொறுப்பு எடுப்பது என்பது மீண்டும்இனவாதிகளின் கோபத்திற்குள்ளாகி தமிழருக்கே உரித்தான நியாயங்களைவெளிப்படுத்த முடியாத கையறுநிலையை ஏற்படுத்திவிட்டதா என்பது பலரிடம் உள்ளகேள்வி.

ஏற்கனவே ஆளுங்கட்சியில் உள்ளவர்களே இரண்டாக பிரிந்து தமக்கே எதிர்க்கட்சிதலைமைப்பொறுப்பை தரவேண்டும் எனக்கோரி நிற்கின்றனர்.

உண்மையாகவே தமிழர் தரப்பின் ஒரு தலைமைக்கு – தற்போதுள்ள அரசகட்டமைப்பின்படி – எதிர்க்கட்சி தலைமைப்பதவி பொருத்தமானதில்லை என்பதுஇப்பத்தியாளரின் கணிப்பும் ஆகும்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை தமிழர்களுடைய பிரச்சனைகளைமையப்படுத்தியதாகவே தமிழர் அரசியல் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத நிலையில்இருக்கின்றார்கள்.

இருப்பதற்கு காணியும் இல்லாமல், இருப்பவன் இருக்கிறானா இல்லையா என்பதும்தெரியாமல் சிறைகளிலே அடைபட்டு இருப்பதே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின்தலைமை, எங்கோ ஒரு மூலையில் அவ்வப்போது சில சிக்கல்களை எதிர்கொள்ளும்சிங்கள சமூகத்திற்காக, வினைத்திறனுடன் குரல் எழுப்பமுடியாது.

அப்படியே குரல்கள் எழுப்பப்பட்டாலும் அது ஆதரவுக்குரலாக மட்டுமே இருக்கமுடியும்.

அப்படியானால் தமிழர் தரப்பு எப்படி எதிர்க்கட்சி தலைமைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்பதை ஆராய்வோமானால் தமிழர் தரப்பின் குரலைபலவீனப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இது என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் அதனை தமிழர்களில் ஒரு தரப்பினர் இப்போது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வைத்துக்கொண்டு வெளிநாட்டு தூதுவர்களோடுசந்திப்புக்களை செய்யமுடியும் என்றும் அதன் ஊடாக தமிழர் தரப்பின் நியாயங்களைஎடுத்துரைக்கமுடியும் என்றும் அவர்கள் கதைவிடுவார்கள்.

சிங்களத்தின் ஆளும் கட்சியும் சிங்களத்தின் எதிர்க்கட்சியும் இருக்கும்போதே தமிழர்தரப்பை ஒரு தரப்பாக கருதி தனிப்பட்ட சந்திப்புகளை முக்கியமான எந்த நாடுகளுமேசெய்துவருகின்றன. செய்துவரும்.

ஆனால் தற்போதைய தமிழர் ஒருவரின் எதிர்க்கட்சி தலைமைப்பதவியானதுதமிழருக்கான கவனம் செலுத்தலை குறைத்து, சிறிலங்கா என்ற நாட்டின்அடிப்படையில் சிந்தித்து ஒவ்வொரு அரசுகளும் செயற்படக்கூடிய நிலையேஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசதலைவருக்கான தேர்தல் காலத்தில், சந்திரிகா மிக கவனிப்பிற்குரியவிடயத்தை பகிர்ந்துவந்தார். அதாவது தான் அரசதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டசமயத்தில் விடுதலைப்புலிகளோடு போர் செய்தே வெல்லவேண்டும் என சிங்கள மக்கள்எண்ணியதாகவும், ஆனால் தனது அரசு சிங்கள மக்கள் மத்தியில் செய்த விளக்கவுரைநடவடிக்கைகள் காரணமாக அந்த மனநிலையை மாற்றியிருந்ததாகவும்பெருமிதப்பட்டிருந்தார்.

ஆனால் இன்று நல்லாட்சி அரசு வந்துள்ள சூழலில், தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைகொடுத்து சமத்துவமாக வாழவேண்டும் என்ற நல்நெறியை சொல்ல எந்தவொருசிங்கள தலைவர்களாவது  தமிழ்தலைவர்களாவது எந்தவொரு நடவடிக்கையாவது முன்னெடுத்தார்களா?

தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும் என்ற மனநிலை சிங்கள தேசத்திற்குஇன்னும் வரவில்லை. அத்தகைய அறிவூட்டலை செய்கின்ற நீண்ட செயற்றிட்டம் முன்னெடுக்காதவரை சிங்கள தேசிய மனநிலை மாறப்போவதில்லை.

ஆனால் அத்தகைய “அறிவூட்டல்” வேறு இடத்தில் நடக்கின்றது.

அண்மையில் ஏறாவூர் சென்ற சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால அங்கு உரையாற்றும்போது  “தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களும் தீர்வு வழங்காமல் சிங்களமக்கள் அமைதியாக வாழமுடியாது” என சொன்னார்.

இதனைப்போலவே அம்பாறைக்கு சென்ற சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் மங்களசமரவீரவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும்“காணாமல் போவதை காணாமல் ஆக்குவோம்” என சபதம் எடுத்திருந்தார்கள்.

இங்கு மைத்திரிபாலாவும் மங்கள சமரவீரவும் சுமந்திரனும் மேற்படி செய்தியை சிங்களதேசத்தில் அல்லவா சொல்லியிருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொழிவுரைகளை செய்வதன் நோக்கம் என்ன?

இதற்கு மேலதிகமாக அண்மைய எடுத்துக்காட்டை கூறலாம்.

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேனா “நாம் ஒரு நாடாக ஒரு தேசமாக வளர்ந்து முன்னேறுவோம் எனதிடசங்கற்பம் கொள்வோம்” என தெரிவித்திருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழில் “மலர்ந்துள்ள இந்தபுத்தாண்டில் கடந்த காலங்களிலேயே பல்வேறு சம்பவங்களின் நிமிர்த்தம் சிதைந்துபோயுள்ள சமூகங்களுக்கு இடையேயான நல்லுறவை கட்டியெழுப்ப அனைவரும்முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன்.

மேலும் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாலும் பல்வேறுசூழ்நிலைகளின் நிமித்தம் இப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடமுடியாத நிலையிலுள்ள எமது உறவுகளையும் நினைவில் வைத்துக்கொள்வோமாக.

மலர்ந்துள்ள இப்புத்தாண்டு அனைவரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற சுபீட்சமானஆண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

என தனது வாழ்த்துச்செய்தியை பதிவு செய்திருந்தார்.

ஆனால் ஆங்கிலத்தில் சிங்கள மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில்

The Sinhala and Tamil New Year is not merely a celebration. Rather, it is a national festival that has deep roots in our culture and traditions. The Sinhala and Tamil New Year is also a symbol of unity as it brings together people, irrespective of race, caste, or creed in national celebration.

However, while I encourage all of you to partake in the celebrations with joy and happiness, I also urge you to remember those who are not so fortunate to celebrate owing to various circumstances.

“My hope is that this New Year would be a peaceful and prosperous one to all Sri Lankans”.

இதில் சிதைந்துபோன சமூகங்கள் மத்தியில் நல்லுறவு வரவேண்டும் என்றோ அதனைகட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும் என்றோ கோரிக்கை விடப்படாமல்

அனைத்து சிறிலங்கா தேசத்து மக்களுக்கும் இதுவொரு தேசிய விழா என்றும்அந்தளவுக்கு எங்களனைவரையும் பிணைத்து வைத்துள்ளது என்றும் ஒரு சிங்களதேசத்தின் தலைவராக தனது வாழ்த்துச்செய்தியை பதிவு செய்திருந்தார்.

அதனால்தான் இப்பத்தியின் ஊடாக முக்கியமான ஒரு விடயத்தை முன்வைக்க விரும்புகின்றோம்.

தமிழரது தனித்துவ தேசிய அடையாளங்களை உடைத்து படிப்படியாகநீர்த்துப்போகச்செய்து சிறிலங்கா ஒரு தேசத்தில் தமிழர்களும்வாழ்ந்துவிட்டுப்போகலாம் என்ற நிலையை உருவாக்குகின்ற முயற்சியிலேயே சிங்களத் தலைவர்களுக்கு ஈடாக தமிழ்த்தலைவர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்தைஇப்பத்தி முன் வைக்கின்றது.

Share This:

No Comment to " சம்பந்தரின் இருமுகங்கள்: சாதிக்குமா? பாதிக்குமா? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM