News Ticker

Menu

தென்சூடானிய தேசம் தனிநாடு! சனவரி 9 வாக்கெடுப்பு

வடசூடான் தென் சூடான் என இரண்டு தேசங்களாக பிரிந்துள்ள அந்நாட்டில், 22 வருடங்களாக பெரும்போர் நடைபெற்றுவந்தது. 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கியுள்ளன.



இருபத்தியிரண்டு வருடங்களாக தொடர்ந்த போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை ஆறுதலான விடயமே.

தென்சூடானிய மக்கள் மத்தியில் உரையாற்றிய சூடானிய அரச அதிபர் பசீர், “தென் சூடான் மக்கள் பிரிந்துசெல்வது கவலையானது. ஆனால் அதற்கான முடிவை அவர்கள் தெரிவுசெய்வார்கள் எனில் அதனை நீண்டுநிலைக்கும் சமாதானத்தின் பெயரால் ஏற்றுக்கொள்கின்றேன்” என குறிப்பிடுகின்றார்.

தென் சூடான் தேசத்தில் கிறிஸ்தவர்களும் வடசூடானிய தேசத்தில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள். ஏறத்தாழ எட்டுமில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், நான்கு மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களில் இரண்டு மில்லியன் வரையானோர் ஏற்கனவே வாக்களிப்பு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். ஆபிரிக்கதேசத்தில் மிகப்பெரிய நாடான சூடான் நாட்டின் தலைவிதி எதிர்வரும் 9 ஆம்திகதி குறிக்கப்பட்டுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தென்சூடான் பிரிந்துவிடும் என நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதால், பிரிவினைக்கு பின்னரான இரண்டு தேசத்தின் உறவுகள் தொடர்பில் வடசூடான் கரிசனை செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென்சூடானிலேயே இருப்பதாகவும் ஆனால் அந்த எண்ணெய் வளத்தை ஏற்றுமதிசெய்வதற்கு வடசூடான் துறைமுகத்தின் ஊடாகவே கொண்டுசெல்லவேண்டிய நிலையே தற்போது உள்ளதாகவும், அதனை எவ்வாறு இருதரப்பினரும் கையாள்வது என்பது தொடர்பில் இணக்கம் காணும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இதேவேளை முக்கியமான சிலபிரச்சனைகளுக்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை. அதாவது, சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் எல்லைகளை பிரிப்பது, எவ்வாறு எண்ணெய் வளத்தை பங்குபோட்டுக்கொள்வது, 38 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனுதவியை எவ்வாறு மீளச்செலுத்துவது, இரண்டு தேசங்களுக்கும் இடையிலுள்ள அபேய் என்ற பிரதேசத்தின் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தமானது போன்றவற்றில் இன்னும் இழுபறி நிலையே காணப்படுகின்றது.

அபேய் எனப்படும் பிரதேசம் எந்தத்தேசத்துடன் இணையவேண்டும் என்பதை, அங்கு வாழ்பவர்களே முடிவுசெய்யவேண்டும் எனவும், அதற்கான இன்னொரு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டாலும் அதுபற்றிய உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது.

இரண்டு வெவ்வேறு காலாச்சாரங்களை கொண்ட இனங்கள் இணைந்துவாழா முடியாது என்பதை இருபத்தியிரண்டு வருட போரின் முடிவில் சூடானிய மேலாதிக்க அரசு கண்டுகொண்டது.

அதற்காக அந்த மக்கள் சிந்திய தியாகமும் விடாமுயற்சியுடன் தொடர்ந்த அந்த மக்களின் பல்வேறு வடிவங்களினான விடுதலைப்போராட்டமுமே என்றால் மிகையல்ல.

தென்சூடானிய தேசம் தமிழீழ மக்களுக்கு ஒரு பாடம்.




- கொக்கூரான்

Share This:

1 comment to ''தென்சூடானிய தேசம் தனிநாடு! சனவரி 9 வாக்கெடுப்பு"

ADD COMMENT
  1. Microgaming additionally be|can be} notable for providing the slot game Mega Moolah, which paid out a whopping $6,374,434 in 2009, the most important on-line casino payout there has ever been. All these merchandise meet 카지노사이트 the important thing} criteria of fine status, security and security, assist, high-quality gaming, and true-to-life on-line live vendor casino expertise. The final thing you need is to take the time to create an account on a casino web site only to discover a sparse gaming library or no games that suit your preferences.

    ReplyDelete

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM