இன்று..!
எல்லைகளைப் பிரித்து போடு!.
உனக்கான நிலத்தை நீயே -
வரையறை செய்து கொள்!
வேலிகளை பலமாக்கு.
எனியும் வயிரவ சூலங்களை
நாட்டுகின்ற செயல் முறையை
இல்லாதொழி!
அரச மரங்கள் முளை விடமுன்
உன் கொடியே
உனதென -
ஊன்றி நடு!
எவன் வருவான்
என்பதெல்லாம் பொய் என்றுணர்.
அயலவனுக்கும் சொல்லி வை..
அல்லது புரிய வை!
இறுமாப்போடு வாழ எனியாகிலும் பழகிக் கொள்.
கோவணமும் பிடுங்கியாயிற்று.
பூவரசம் இலையில் -
ஊதுகுழல் ஊதலாம் என்கிற கனவை விட
தென்னையிலும்
வெடி சுரக்கும் என்பதை எதிரி உணரட்டுமே!
உனக்கான மொழி இல்லை
என்று -
அவனும் சொன்னதில் வரம் கொள்.
அயலவனையும் -
யோசிக்க வை.
அவனுக்கும் சேர்த்தே -
உன் மொழியில்
தேசிய கீதம் பாடிப் பழகு!!
தேவாரங்களும் பொய்க்கட்டும்!
-முல்லைஅமுதன்.
19/12/2010








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















