எறிகிறேன் கவலைகளை யாரும் ஏந்தவேண்டாம் பத்து வருடங்களாய் - சிறையில் பட்ட பாடுகளை விட்டு ஓடிவர விருப்பம் பல எனக்கு. அம்மா தன் பணத்தை ஆறாய் இறைத்து என்னை சிறையால் மீட்டுவர சிந்திய வியர்வை எல்லாம் கடைசிக் கணமதிலே கண்ணீர் ஆனதுவே வக்கீல் சொல்கேட்டு அம்மா வார்த்த பணங்களெல்லாம் நீதி சொல்கையிலே நீறாகும் என்றறியா என் சொந்தங்கள் கதறியழ நான் சொன்னேன் ஆறுதலை. பணந்தான் உலகமென்று பாரே அறியுமம்மா - நீ பார்க்கும் உலகிமிது ஏமாற்றம் தந்தாலும் நீதி சொல்பவனின் நினைவில் பணத்தை நிறை பாதி வழக்கெனினும் என்னை பறந்துவர விட்டிடுவான். என்னிடம் விற்க இனி என்னப்பா இருக்கிதென்று அம்மா அழுத கதை என் வாழ்க்கையிலே பெரிய வதை. பத்து ஆண்டுகளாய் அவளை நான் படுத்திவிட்டேன் போதும் போதும். இனிமேல் எனக்காய் அம்மா இறைத்ததெல்லாம போதும் போதும். அரசு விட்டால் வீடு வாறேன். விடாதுபோனால் அழாதே அம்மா. என்றுநான் சொன்னவுடன் - என்னம்மா ஏங்கிவிட்டாள் அக்கணத்தில். வெறுமை தின்றமுகம் விம்மலை மறந்துவிட நடைப்பிணம் போல அம்மா நடக்கிறாள் சிறையைவிட்டு. நீதியே மறந்துவிட்ட எங்களுக்காக அழுவோம் வாடா என்று அணைத்துச்சென்றான் என் சிறைத்தோழன். இன்னமும் என்னைப்போல் ஆயிரம் கைதிகள்தான் சிறைகளை நிறைத்துவைத்து வெறுமையால் கழுவுகிறோம். வேதனை பட்டழுத தாயின் கண்ணீரெல்லாம் காய்ந்து வற்றியிங்கு கனகாலம் போனாலும் அவளுயிர் வீழ்ந்து மடியமுன்னர் விடுதலை ஆகிச்சென்று விடவேண்டும் எனுந்துடிப்பு இன்னமும் வற்றுதில்லை. அம்மாவுக்கு கொள்ளிபோட ஆசை எனக்கில்லை. ஆனால் என் அம்மாவுக்கு உண்டெல்லோ. நோய்தின்ற உடல்பாதி கவலைதின்ற உயிர்பாதிபோக குற்றுயிராய் நடமாடும் அவள் மரணம் அடைந்தாலும் ஆத்துமா அலைபாயும் அது சிறைச்சுவரை தாண்டிவந்து என் மனத்தை பிடுங்கித்தின்னும். கவலைகளே தின்றுதின்று கறையானறித்த புத்தகமாய் செல்லுபடி ஆகாத தாள்களாகிப்போன எங்கள் வாழ்க்கையின் வதைக்கதைகள் யாருக்கும் பயனென்றில்லை. எனினும் எரிக்கும் கவலைகளை இவ்வெழுத்தால் எறிந்துவிட முடிகிறதா என்றுதான் எழுதிப் பார்த்தேன். எறிகிறேன் கவலைகளை யாரும் ஏந்தவேண்டாம்
சிறைவாசன் |








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















