சூப்பர் ஸ்ராறை சொந்தம் கொண்டாடும் என் சொந்தங்களே
நாளை வருகிறதாம் எந்திரன்
எல்லோரையும் போல எனக்கும் சந்தோசம்
”சிங்கத்தின் படமல்ல” சும்மா ஒரு சிலிர்ப்புத்தான்
ஆனாலும் சிந்திக்கவைக்கும் செய்தியொன்று
செவிக்கு எட்டியது
ஐயா கலைஞரின் சொத்தில்தான் எந்திரன் படம்
எடுப்போடு வருகிறதாம்
எட்டிக்கூப்பிடும் இடத்தில் - நாம்
எத்தனையோ இடர் பட்டபோதும்
ஐயா கலைஞர் அற்புதமாய் நடித்தார்
பொங்கி எழுந்த தமிழ்நாட்டு மண்ணை
தம்மை எரித்த தமிழ்ப்பற்றாளரை
எங்கள் சார்பாய் எழுந்த அலையை
எல்லாம் மறந்த எங்கள் ஐயா
எந்திரன் போட இப்போது வருகிறார்.
தலைவர் தனது தம்பி என்றார்
தமிழினம் தனது சொந்தம் என்றார்
'ஐயோ ஐயா' என்று கதறும்போதெல்லாம்
அழகாய் ஒரு கவி படைப்பார்
தனிநாடே தீர்வென்றார் தேர்தலின்போது
தயவாக போகவேண்டும் தாயகம் வேண்டாம்
இப்போது மீண்டும் ஏறுகிறார் பழைய மரம்
தமிழின தலைவர் என்றால் தன்மானம் வேண்டாமா?
எதிர்த்துநிற்கும் சி்ங்களத்தை எடுத்துச்சொல்ல முடியாமல்
தடுத்துவைத்த எங்கள் ஐயா தண்ணி காட்ட போகின்றார்
இப்போதும் நாங்கள் இதை இடித்துக்கூறவில்லையென்றால்
எப்போது இனி எப்போது?
சொந்த ரீவி வைத்தும் சொல்ல மறந்த எம்கதையை
சொல்லவைக்க முடியாமல் நாமிருக்கும் நிலையென்ன?
எந்திரனை பார்த்துவிட எல்லோருக்கும் ஆசை என்றால்
இன்ரநெற்றில் இறக்கி அதை அன்றிரவே பார்த்திடுவோம்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















poril iranthavarkallukku
entha oru varutham thervikkatha
entha oru karisam kattatha
aiyoo tamilan saga kidakiran endru tamil nattu makkalukku sollatha
kaiyil adikaram irunthum onnum seiyatha
SUN TV network ,Kalaingar TV,SUN Pictures pondra
TV channelai
pulam peyar tamilargal purakkanikka venum...
ithuvum namakku name endra oru thittam
tamilane sindithhu seyal padu