நேற்றுவரை நீயிருந்தாய்
இன்று ஏனோ மாறிவிட்டாய்
காற்று வீசும் பக்கமாக கால் எடுக்க
துணிந்துவிட்டாய்
தோற்றபோது நாங்கள் எல்லாம்
தேற்றக்கூட ஆட்களின்றி
தேசம் என்ற பற்றுதலில் ஒன்றுபட்டு நிற்கையிலே
வேசம் மாற்றி நின்று பல கதைகள் எழுதுகிறாய்.
எல்லோரும் நாங்கள் ஏதோ இழந்துதான்
பயணித்தோம்.
எல்லா இறுக்கத்தையும் பொறுப்போடு
ஏற்று நின்றோம்.
ஒவ்வொன்றாய் இழந்து உருவான தேசத்தை
உலகமே வந்துநின்று உழுதுபோட நின்றபோது
இருக்கும் வல்லமையே வழியென்று தடம்பதித்தோம்
முன்னுாறாயிரமாய் அவன் முன்னேறி வந்தபோது
எண்ணாயிரம் கூட எங்கள் பக்கம் வேண்டாமா?
பக்கத்து வீட்டானும் பாடை கட்ட வந்துநின்று
துக்கத்தில் இருந்த எம்மை தூக்கத்திலும் கொன்றுபோட -
எட்டப்பர் கூட்டம் எதிரிபக்கம் நின்று கொண்டு
திட்டங்கள் போட்டு தினம் கொலை அரிவாள்
கொடுத்தனுப்ப -
மூச்சுவிட நேரமில்லா முழுநேர போரெதிர்த்து
மூன்று வருடங்களாய் முயன்றுதானே பார்த்தோம்
எட்டுத்திக்கும் எதிர்த்து வந்துவிட்டால்
வீட்டுக்கு எல்லாமே வேலியாய் போகும்
வன்னி மான்மியத்தில் நீ தானே சொல்லிவந்தாய்.
எங்கள் பிள்ளை தானே இவனென்ற எண்ணம்
எப்போது உனக்கு இல்லாமல் போனது
எட்டி நடந்து எங்கள் அண்ணன் போனபோது
வட்டம் போட்டு அதற்கு இரண்டு புள்ளி போட்டு
பாட்டு மாதிரி பல்லவி போட்டு நின்றாய்.
ஆச்சே தொடக்க்கம் ஆராய்ச்சி செய்த உனக்கு
போர்க்கல்வி பற்றி புரியாதா?
இங்காலே இருந்து தினம் கண்டுசென்ற அல்லல் எல்லாம்
அங்காலே போனதனால் அடியோடு மறந்ததுவோ?
"வெற்றிலையை" தந்தங்கு வரவேற்ற காரணத்தால்
வெற்றி தந்த இனம் இப்போ வெற்று இனம் ஆகியதோ?
எதிரி அடித்து எங்கள் இனமழித்த போதுகூட
இந்த துயர் வந்ததில்லை
எதிரில் நின்ற உன் எழுத்து இன்று
இரண்டாம் கொலை புரிய
எழுந்து நிற்கும் வேளையில்தான்
நெஞ்சம் எரிகிறது.
இப்பொழுது புரிகிறது எம்தலைவன் சொன்னது ஏன்?
தொலைவில் இருக்கும் எதிரியைவிட
அருகில் இருக்கும் துரோகியே மோசமானவன்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















