Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

வெளித்தெரியா வெள்ளிகள் - 01

மின்னஞ்சல் அச்சிடுக PDF

kalankal-01-smallஇதுவொரு காலத்தின் பதிவு. ஆங்கிலத்தில் நூலாக வெளிவரவிருக்கின்ற இப்பதிவின் தமிழ்ப்பதிப்பு தொடராக ஈழநேசனில் வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைக்காக புறப்பட்ட ஒருவனின் வாழ்க்கையோடு பயணிக்கும் இப்பதிவு - ஒரு சிறுமுயற்சியே. தாயகத்தமிழர்களின் வேதனைகளும் வலிகளும் அவர்களது தியாகப்பயணமும் இன்னும் தொடரும் நிலையில் வெளிவருகின்ற தொடர்பதிவு இதுவாகும். தமிழிலக்கிய பரப்பில் ஈழத்துபோராட்ட இலக்கியமும் முக்கியமானது என்ற வகையில் இதனை வெளியிடுகின்றோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

”அம்மா நான் ஒருக்கா லைப்ரரிக்கு போட்டுவாறன்” எனச்சொன்ன கீதன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.

”ஒரே வெயிலாக்கிடக்கு இப்ப என்ன அவசரம்” என்ற அம்மாவின் குரலுக்கு ”இல்லை பேப்பர் பாத்திட்டு வாறன்” என்றவன் சைக்கிளுக்கு காற்று இருக்கின்றதா எனப்பார்த்தான்.

”கொண்ணை இப்பதானே பேப்பர் வாங்கிக்கொண்டுவந்தவன்”.

”இல்லை நேற்றைய பேப்பர் ஒருக்கா பார்க்கவேணும். உடன வந்திடுவன்” என்று சொல்லியவாறே சைக்கிளில் ஏறிவிட்டான்.

”சரி அப்ப வரக்க, கடையில் சீனி அரை கிலோ வாங்கிக்கொண்டு வா. தேத்தண்ணி போடுறதுக்கு கூடு ஒண்டும் இல்ல” என அம்மா அவனது கையில் காசை திணித்தபோது, ”இல்லை பின்னேரம் வாங்கலாம்” எனச் சொல்லியவாறே சென்றான்.

அப்பிடி என்ன அவசரமாய் போறான் என நினைத்தவள், பின்னால கூப்பிடக்கூடாது என நினைத்தாள் போலும் பேசாமல் இருந்துவிட்டாள். அவனோடு இனிப்பேச பல வருடங்கள் ஆகும் என்பதை அவள் அன்று அறிந்திருப்பாளா?

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

அப்போது யாழ்குடாநாடு போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம். யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிகளை கைப்பற்றிய இராணுவத்தினர் யாழ் குடாநாட்டை முழுமையாக கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

குடாநாட்டிற்கான வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டுவிட்டன. இப்போது பலாலி பெருந்தளத்திலிருந்து இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

kalankal-02பாதுகாப்பான இடங்கள் எதுவும் இருக்கவில்லை. நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது குண்டுவீச்சு விமானங்கள் பதிந்தபோதும் அத்தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவு பெருந்தொகையில் மக்கள் குவிந்திருந்தார்கள். வீதிகள் நிரம்பியிருந்தன. ஆனாலும் அந்தக்கொடிய விமானங்கள் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றுபோட்டிருந்தது.

இனி ஒன்றும் செய்யமுடியாது என்பது தெரிந்து, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த அம்மண்ணிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இவனது நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.

பக்கத்துவீட்டு வேலி தங்கட காணிக்குள் சாய்ந்துவிட்டது என்பதற்காகவே வழக்கு போட்ட மக்கள் - தங்கள் மண்ணே பறிபோகின்றது என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாதவர்களாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இவனுக்கு முன்னால் ஒரு தெரிவே இருந்தது. அந்த வழியில் பயணிக்க கீதன் முடிவெடுத்திருந்தான். ஒன்றன்பின் ஒன்றாக படகுகள் இணைக்கப்பட்டு ஏறக்குறைய நானூறு பேர் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அப்போதைய பயணத்தைப்போலவே தொடரப்போவதும் பெரும் சவாலானதுதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

கடற்பயணத்தை பாதுகாப்பதற்காக ”எங்கட பெடியள்” நிற்கிறார்கள் என்ற பாதுகாப்புடன் அப்பாதையால் மக்களும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தப்பாதையை காத்துநின்ற அந்த வீரர்கள் பற்றியும் அவன் அறிந்திருந்தான். ஆனால் தன்னோடு பயணிக்கும் தோழர்களும் அவ்வாறு தற்கொடையாளர்கள் ஆவார்கள் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

அது யாழ்குடாநாட்டை வன்னி பெருநிலத்திலிருந்து பிரித்த கடல் நீரேரி. அப்பாதையால் பயணிக்கும் எவரும் படையினரால் குறிவைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை காப்பதற்காக காவல்தெய்வங்கள் கண்ணயராமல் கடலினில் நிற்பார்கள்.

அக்கடற்பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக படையினர் மேற்கொண்ட ஒவ்வொரு கொடுமைகளும் அதனை எதிர்த்து அவர்கள் செய்த தியாகங்களும் மக்கள் மத்தியில் இனம்புரியாத தேசிய உணர்வை வளரச்செய்தது.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

அம்மா அப்பா சகோதரர்கள் என அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலங்கள் குறைவு. சிறுவயதிலே தொடர்ந்த இடப்பெயர்வுகள் அவனது குடும்பத்தையும் சிதறச்செய்தது. அதனால்தான் சேர்ந்திருந்த அந்தக்காலங்கள் காணாமல்போய்விடக்கூடாது என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஆனால் அவர்கள் அவனை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கடமையை அவன் உணர்ந்திருந்தான் போலும்.

காலைப்பயிற்சிகள் கடுமையாக இருக்கும். வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் கடுமையானதாக இருக்கும். காலையில் ஏழு மணிக்கு எழும்பியவனுக்கு பயிற்சிக்காலங்களில் நாலரை மணிக்கு ஊதும் விசில் பழகிப்போனது ஆச்சரியமானதுதான்.

போராட்டம் கடுமையானது. அதற்கு துணிவு தந்திரம் கடும்பயிற்சி தேவை. பயிற்சி ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதனால்தானோ என்னவோ தன்னை மாற்றிக்கொள்ள அவன் விரும்பினான்.

இப்போது அவனாகவே கடுமையான சூழலில் வாழ விரும்பினான். காலையில் அகவணக்கம் செய்யும்போது திலீபனை பூபதி அம்மாவை கிட்டண்ணைாவை மனதில் நினைந்துகொள்வான். அவர்களை போன்ற உறுதியுடன் தானும் பயணிக்கவேண்டும என திடம்கொள்வான்.

காலை தொடக்கம் இரவு வரை கடும்பயிற்சி. இரவுகளில் தொடரும் உடனடி காப்பு பயிற்சி.

தன்னோடு நின்ற பல தோழர்கள் எவ்வளவு கடினப்பட்டு இதனை செய்கின்றார்கள் என்று எண்ணும்போது தானும் தனது பங்கை நிறைவுசெய்துவிடவேண்டும் என்ற துடிப்பு அவனிடம் இருந்தது.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

kalankal-03மேஜர் ரஜீவன் அண்ணா தான் பயிற்சிமுகாம் பொறுப்பாளர். அமைதியான அந்த உருவத்திற்குள் அடங்கியிருந்த ஆளுமையை கண்டு பலதடவை வியந்திருக்கின்றான்.

பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என்பதை அவரோடு பழகினாலே அறிந்துகொள்ளமுடியும்.

போராளிகள் உண்மையானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் சமூகசிந்தனையுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவார்.

அவர் ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமரில் காயமடைந்திருந்தார். அதன் பின்னர் நிர்வாகப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். யாழ்குடாநாடு முழுவதுமாக அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலையில் அங்கு சென்று சண்டை செய்யப்போவதாக கேட்டு தலைவருக்கு கடிதம் எழுதுவார்.

அவ்வாறு அனுமதிபெற்று யாழ்ப்பாணம் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது - மாவீரர் நாளில் துயிலுமில்லத்தில் விளக்கேற்றவேண்டும் என்ற துடிப்போடு சென்று விளக்கேற்றிவிட்டு திரும்பிவரும்வழியில் வீரச்சாவடைந்திருந்தார்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

கீதனது பயிற்சி முகாமில்தான் லெப்கேணல் சுபேசன் அண்ணனின் அணியும் தங்கி விசேட பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கரும்புலிகள் அணியை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அவர்களை நேரடியாகவே முதற்தடவையாக கண்டபோது தியாகத்தின் உச்சங்களின் முகங்களை தரிசித்தான்.

அவர்கள் ஆங்கில படங்களில் வருவது போன்றமாதிரியான பயிற்சிகளிலேதான் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஏழுபேர் கொண்ட அணியாக மட்டுமே அவர்களது பயிற்சி போய்க்கொண்டிருந்தது.

கீதனுடன் ஏறக்குறைய முன்னூறு பேரளவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பயிற்சிகள் தொடக்கநிலைபயிற்சிகளாக மட்டுமே அவை அமைந்திருந்தன.

சிறப்பு பயிற்சிகள் பெற்றுக்கொண்டிருந்த சுபேசன் அண்ணனின் அணியோ எங்கோ விமானதளத்தை தாக்குவதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள். அது பலாலியா கல்குடாவா அல்லது திருமலையா என யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் பற்றி யோசிக்கமுடியாத காலம்.

ஆனால் பின்வந்த நாட்களில் ஆட்லறிதளம் ஒன்றை தாக்குவற்கான பயிற்சியாக மாற்றம் பெற்றது. அவர்களது பயிற்சிகள் அனைத்தும் ஒத்திகை பயிற்சிகளாகவே இருந்ததன. ஆனால் காலவோட்டத்தில் தாக்குதல் திட்டங்கள் மாறி இடங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.

இவ்வாறு இலக்குகள் மாறி இடங்கள் மாறிக்கொண்டிருந்த போதிலும் தங்கள் விடுதலைக்கான விலையை மாற்றாமல் உறுதியாக நின்ற இவர்கள் சுமார் ஆறுவருட காத்திருப்புக்கு பின்னர் ஆனையிறவில் மூச்சடங்கிப்போனார்கள்.

ஓரு கணத்திலே வெடித்துப்போகின்ற இவர்களின் இறுதிக்கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத்தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

”நான் கம்பிவேலியை உடைக்க வெடிக்கிறன். அந்தப்பாதையால் போய் நீங்கள் முதலாவது காவலரணில வெடியுங்கோ. மற்ற ஆட்கள் ஆட்லறியை வெடிக்கவைக்கலாம்” என தாங்களே திட்டமிட்டுகொள்ளும் இவர்களுக்குள் உள்ளே புகுந்துகொண்ட அந்த மனவுறுதி எப்படி அவர்களுக்கு உருவானது.

majo-aasha

ஆனையிறவு ஆட்லறி தாக்குதலுக்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது வரைபடத்தின்மீது இருந்துகொண்டு ”நான் இந்த பிப்ரி கலிபரை விடமாட்டன். அதை உடைக்கமுதல் அதை எடுத்து அவனுக்கே திருப்பி அடிப்பன்” மேஜர் ஆஷா சொன்னபோது அவனால் அவர்களை புரிந்துகொள்ளமுடியவில்லை.

வெடிப்பது சார்ஜரை இழுப்பது என இயல்பாக சொல்லும் இவர்கள் தங்கள் உயிரை பற்றி ஒருகணமேனும் சிந்திப்பதில்லை. ஏனென்றால் தாங்கள் வீரச்சாவு அடைவதற்கு முன்னர் எத்தனை எதிரிகளை கொன்றோம் எத்தனை எதிரியின் போர்த்தளபாடங்களை அழித்தோம் என்பதில்தான் அவர்கள் இலக்கு இருந்தது. அவர்களுக்குள் புதைந்திருந்த அந்த ஆன்மஉறுதியை கண்டு இவன் மெய்சிலிர்த்துப்போனான்.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

யாழ் குடாநாடு இடப்பெயர்வின்போது வன்னிப்பெருநிலம் எங்கும் ஓலைக்குடிசைகளே நிரம்பிநின்றன. அடுத்தடுத்த இடப்பெயர்வுகளே எம்மக்களின் வாழ்வை அவலநிலைக்கு கொண்டுசென்றது.

ஓலைக்குடிசைகளில் ஆங்காங்கே தெரியும் உறவுகளை காணும்போது இவர்களுக்காக என்றாலும் நாம் போராடவேண்டும் என்ற உறுதி இன்னும் அதிகரிக்கும்.

ஆறு மணிக்குப்பின்னர் வீதியை மறித்து படுத்திருக்கும் அந்த ஊர் மாடுகள் வாகனங்களுக்கு வழிவிடாமல் தங்கள் பாட்டில் படுத்திருக்கும். இரவு வந்துவிட்டால் தங்களுக்கே வீதி சொந்தம் என எண்ணுகின்றன போலும்.

மாடுகளை பொதுவாக ஐந்தறிவுள்ள பிராணிகள் என சொல்ல கேள்விபட்டிருக்கின்றான். ஆனால் அவற்றுக்குள்ளே இருக்கின்ற ஒட்டுறவை கண்டு பிரமித்துப்போயிருக்கின்றான்.

ஒரு தடவை வழங்கல் சாப்பாடு சலித்துப்போன நிலையில் மாடு அடிப்போம் என கீதனுடன் இன்னும் மூன்றுபேர் வவுனியாவின் எல்லைப்புற கிராமம் ஒன்றுக்கு சென்றார்கள்.

அங்கு காட்டெருமைகள் என்று சொல்லக்கூடிய மாதிரி ஊர்மாடுகள் காடு ஏறி வாழ்ந்துவந்த நேரம் அது. ஒரு கூட்டம் மாடுகளை கண்டு அவற்றில் ஒரு நாம்பன் மாட்டை குறிவைத்து சுட்டான் கீதன். ”கீதன் நீ பக்கத்தில் நிண்ட மாட்டை சுட இந்த மாட்டுக்கு பட்டுட்டுதடா” என வேந்தன் நக்கலடித்தான்.

வேந்தன் எப்பவுமே கலகலவென்று எதையாவது சொல்லி மற்றவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பான். மேடைநிகழ்ச்சிகளில் எப்போதும் அவன் வந்ததாகவே ஞாபகம். அவனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வை பின்னொரு பொழுதில் பார்ப்போம்.

அந்த மாடு சூடுபட்டு கீழே விழப்போனபோது ஒரு கணம் கிலி கொண்ட மாடுகள் சுதாகரித்து – கீழே விழுந்த மாட்டை கீழே விழாமல் தள்ளிக்கொண்டு செல்லமுயற்சித்தன. அதுமுடியாமல் போகவே அந்த மாட்டை விட்டுவிட்டு மற்றையவை காட்டுக்குள் ஓடின.

அதுவரை நாளும் மாடுகள் தானே நினைத்தவனுக்கு அந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை உருவாக்கியது. மிருகங்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியம் கூட மனிதர்களுக்குள் இல்லாமல் போய்விடுகின்றதே.


 

இன்னும் வரும்.....

 

- ஈழச்செல்வன்

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
மன்னிக்க வேண்டும்
1 வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 04:10
இந்திரன்
மேஜர் ரஜீவன் அண்ணா, அவர் ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமரில் காயமடைய வில்லை,
புலிப்பாச்சலில்தான் காயமடைந்தார். வயிரில் காயமடைந்தார்.

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

மாசில்லா பிள்ளைகள் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)
தமிழினம் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 7 (தோல்வி அல்ல தொய்வு)
சாட்டயடி உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
Sad இறுதி நாட்களும் எனது பயணமும்
பண்பின் பயனாக, விடுதலையை வளர்க்க வேண்டும் உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)
uavum unarvum உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் - 5 (பிணவாடையில் கரைந்துபோன காற்று)
pinam thinnigal உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
KADAVUL ENGEY? உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-4 (யாருக்கும் யாரும் துணையில்லை)
அக்கினிக் குஞ்சுகள்! உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2
unarvukali erake vitha naram உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1

உணர்வுகள்

unarvukal

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 சிறை 1 சிறை 2 சிறை 3

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 63 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க