Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

மின்னஞ்சல் அச்சிடுக PDF

IMG_3571asதாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27 - 11 - 2011 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Maaveerar_Naal_Melb_2011_12_CROPPED

தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான அர்ப்பணிப்பை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.

மாலை 4 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு சிறி அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்க, ஆஸ்திரேலிய கொடியை, செயற்பாட்டாளர் திரு. கிருஸ்டி அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசின் விக்ரோரிய மாநில பிரதிநிதி திரு. டொமினிக் அவர்களும் ஏற்றிவைக்க ஆரம்பமான நிகழ்வில் அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து எழுபத்தைந்து மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் நின்று, எங்களின் சுதந்திர வாழ்வுக்காக தங்களின் உயிரையே அர்ப்பணித்த அந்த உத்தம சீலர்களுக்கு கண்ணீராலும் பூக்களாலும் வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் அடுத்ததாக இடம்பெற்ற அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்ல பாடல் மண்டபத்தை நிறைத்துக்கொண்டது. அரங்கின் முன்பாக அமைக்கப்பட்ட திரையில் பாடலின்போது காண்பிக்கப்பட்ட தாயகத்தின் துயிலுமில்ல காட்சிகளும் அங்கு எமது உறவுகள் விட்ட கண்ணீரும் மண்டபத்திலும்கூட அனைவரது மனங்களையும் கசியச் செய்தன.

உலகெங்கும் எமது உறவுகள் பரந்துவாழ்ந்து கண்டங்கள் தாண்டி எங்கள் தாயகத்தை பிரிந்திருந்தாலும், இந்த மாவீரச்செல்வங்கள் தங்கள் தியாகத்தினால் எமது மக்களின் உரிமைகளுக்கு மட்டும் உறுதியளித்துசெல்லவில்லை, எமது இனத்தின் ஒற்றுமைக்கான சக்தியையும் வழங்கிச்சென்றுள்ளார்கள் என்ற உண்மை அந்த தருணத்தில் உணரப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளாக முதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து உறுதியுரையும் இடம்பெற்றது.

”தமிழீழ தாய்நாட்டுக்காக – தமது இன்னுயிரை ஈந்த

மாவீரர்களை நினைவு கூரும் - இப்புனித நன்நாளில்

ஈழத்தமிழனாகிய நான் - உலகின் எந்தத்திசையில் வாழ்ந்தாலும்

தமிழீழமே எனது இலட்சியம் என்றும் - சுதந்திரமும் இறைமையுமுள்ள

தமிழீழத்தனியரசான - எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக

அயராது உழைப்பேன் என்றும் - உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்

”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

 

என்ற உறுதி மொழி வாசிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் எழுந்து நின்று அதனை உரத்துக்கூறி பிரமாணம் செய்துகொண்டனர்.

 

அதனை அடுத்து, ”கார்த்திகை 27” பாடலுக்கான நிருத்தாலயா நடனப்பள்ளி மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. அதை தொடர்ந்து செல்வி சிவகாமி திலகராஜன் தான் தாயகத்துக்கு சென்று மாவீரர் துயிலும் இல்லத்தை தரிசித்த அனுபவத்தையும், மாவீரர்களின் தியாகத்தையும் ஆங்கிலத்தில் வழங்கினார்.

அடுத்தநிகழ்வாக, ஆங்கிலப்பாடல் ஒன்றை செல்வி கீதா தெய்வேந்திரன் அவர்கள் உணர்வுமயமாக வழங்கினார். பாடலின்போது அகலத்திரையில் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட மறவர்களின் காணொளிகள் காட்சியாகின.

தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் விக்ரோரிய மாநில பிரதிநிதி திருமதி ஜெனனி பாலா மாவீரர்களின் ஈகம் தொடர்பாகவும், அவர்களின் இலட்சியத்திற்காக நாடு கடந்த தமிழீழ அரசும் பயணிக்கும் என்று உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, திருமதி மீனா இளங்குமரனின் நடனாலய நடனப்பள்ளி மாணவ மாணவிகள் வழங்கிய ”சத்தியவேட்கை” என்ற நாட்டிய நாடகம் அனைவரின் நெஞ்சையும் தொட்டது. தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அழித்தொழித்து ஆயிரமாயிரமாய் எமது உறவுகளை முள்ளிவாய்க்காலில் சங்காரம் செய்த சிங்களப்படைகளின் கோரமுகத்தையும் அதிலிருந்து மீண்டும் எழுந்து எம் மாவீரர்களின் ஈழக்கனவினை நனவாக்கும் போரில் சத்தியம் செய்துகொள்ளும் கருப்பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் மிகவும் உணர்வுபூர்வமானதாக பார்த்தவர்கள் எல்லோரையும் சிலிர்க்கவைத்தது.

அடுத்தநிகழ்வாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு சபேசன் சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் மெல்பேர்னில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தாயகமக்களுக்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும் பேசினார்.

இடைவேளையை தொடர்ந்து, சிறுமி அபிதாரணி சந்திரன் தாயக அவலத்தை பிரதிபலிக்கும் ”ஏன் இந்தக் கோலம்” என்ற தனி நடிப்பை வழங்கி இருந்தார். தாயகமக்களுக்கு புலத்து வாழ் மக்கள் உதவவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அச்சிறுமியின் நடிப்பு நிறைவாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது.

இறுதி நிகழ்வாக, ”பயணம்” என்ற குறும்படம் அகலத்திரையில் காண்பிக்கபட்டது. தாயகமக்கள் சந்தித்த அவலவாழ்வை சித்தரித்தது அக் குறும்படம்.

மாலை 7.30 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

நேற்றைய நிகழ்வின் இன்னொரு முக்கிய விடயமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ன் கிளையினர் வெளியிட்ட ”காந்தள் 2011” மாவீரர் நினைவுதின சிறப்பிதழ் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.

Maaveerar_Naal_Melb_2011_01

Maaveerar_Naal_Melb_2011_02

Maaveerar_Naal_Melb_2011_03

Maaveerar_Naal_Melb_2011_04

Maaveerar_Naal_Melb_2011_05

Maaveerar_Naal_Melb_2011_06

Maaveerar_Naal_Melb_2011_10

 

Maaveerar_Naal_Melb_2011_07

Maaveerar_Naal_Melb_2011_08

Maaveerar_Naal_Melb_2011_09

Maaveerar_Naal_Melb_2011_13

Maaveerar_Naal_Melb_2011_14

Maaveerar_Naal_Melb_2011_15

Maaveerar_Naal_Melb_2011_16

Maaveerar_Naal_Melb_2011_17

Maaveerar_Naal_Melb_2011_18

Maaveerar_Naal_Melb_2011_19

Maaveerar_Naal_Melb_2011_20

Maaveerar_Naal_Melb_2011_21

Maaveerar_Naal_Melb_2011_22

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011 21:17 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "புலம்"

UN need to Arrast Rajapakse and the armed forse leaders அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
http://koothadiveddai.blogspot.com/ இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)
ealam eangal thagam மே 2009 அரச படைகளின் வெறியாட்டம்! உலகத்தமிழர் பேரவை ஒளிப்படங்களை வெளியிட்டது!! (படங்கள் இணைப்பு)
ananthasankari வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!
thanks மிகக்கொடூரமான போர்க்குற்ற காணொலி ஒன்றை அடுத்தவாரம் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 அறிவிப்பு!
THANKS தாயக உறவுகளுக்காக நீதியை நாடி நிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்கள் - அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
கருத்து இழந்துபோன உறவுகளை நினைவுகூர்ந்து தமிழகத்தில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்! ( படங்கள் இணைப்பு)
Uthavi 800000 பார்வையாளர்களை கலங்கவைத்த சனல் 4 காணொளி! வருட இறுதிவரை பிரித்தானியா காலக்கெடு!!!! (காணொளி இணைப்பு)
srilanka killing tamil civilians கண்ணீரில் உறையவைத்த காணொளி ஐநாவில் காட்சிப்படுத்தல்! மேலதிக விபரங்கள் இணைப்பு (காணொளி)

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 75 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை