தமிழகத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள்
தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
நவம்பர் 26ஆம் நாள் தேசியத் தலைவரின் 57ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 57 கிலோகிராம் எடையுள்ள கேக் வடிவமைக்கப்பட்டு விமரிசையாக அப்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நவம்பர் 27ஆம் நாளில் மாவீரர்நாளன்று காலை எட்டு மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை திரு.கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றிவைத்தாரல். அதைத் தொடர்ந்து தியாகி செங்கொடி நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன. தாயக நேரப்படி அனைத்து நிகழ்வுகளும் கைக்கொள்ளப்பட்டன. புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர்நாள் அறிக்கை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் அஞ்சலி, தீபமேற்றல் என அனைத்தும் ஒழுங்குமுறையில் நிகழ்ந்தேறின.
இந்நிகழ்வில் பெருமளவான தமிழக மக்கள் கலந்துகொண்டதுடன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர். உணர்வுமயமான மாவீரர்நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாள்முழுவதும் நிகழ்வுகள் இடம்பெற்றதும், புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.