Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

பழங்களும் பயன்களும் - 5

மின்னஞ்சல் அச்சிடுக PDF
dessert_fruits_fruitஇப்பகுதியில் நாம் தொடர்ந்து, பலவிதமான பழங்களைப்பற்றியும், அவற்றால் விளையும் பயன்களைப்பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது செர்ரி, ப்ளம்ஸ் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி குறித்துக் காணலாம்.

சின்னச்சின்ன செர்ரிப்பழம்:

செர்ரிப்பழம் கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசிய நாடுகளில் பண்டைக்காலம் முதலே பயிராகி வரும் கனியாகும். புளிப்பு மற்றும் இனிப்பு என இரு சுவைகளில் கிடைக்கும் இந்தக் கனியானது, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படும். இப்பழத்தில் ஏராளமான இரும்புச்சத்து காணப்படுகிறது. காரத்தன்மையுடைய (Alkaline) பழமாகையால், இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை (Toxic waste) வெளியேற்றவும், சிறுநீரகம் மற்றும் கல்லீரலைச் சுத்தம் செய்யவும் வல்லது.

சிவப்பு நிறச் செர்ரிப்பழமானது, ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த காரணியாகும். இது ருமாடிக் ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டுவலிக்கும், நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வலியைக்குறைக்கவும் வல்ல இக்கனி, புற்றுநோயைத் தடுப்பதிலும் பெருமளவு பங்கு வகிக்கிறது. பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செர்ரியில் உள்ள 'Anthocyanin' களே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். இவையே செர்ரிப்பழத்திற்கு நிறமளிக்கின்றன. இனிப்புச் செர்ரியில் இருப்பதை விட, புளிப்பான தன்மையுடைய செர்ரியில், இந்த வேதிப்பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய்க்கு மட்டுமில்லாமல், வாதம், மாரடைப்பு இவற்றுக்கு எதிராகவும் போராட வல்லது. அது மட்டுமல்ல, செர்ரிப்பழம் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக்குறைக்க வல்லது.

செர்ரிச்சாறும் ஏராளமான மருத்துவக்குணங்களை உடையது. உடலுக்குத் தேவையான பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கியது. 250 மி.லி. செர்ரிச்சாறு குடித்தால், கிட்டத்தட்ட 25 வகையான பழங்களையும், காய்கறிகளையும் உண்ட பலன் கிடைக்குமாம். பட்டாணி, தக்காளி, தர்பூசணி, காரட், வாழைப்பழம் இவற்றை ஐந்து முறை உட்கொண்டதற்கு ஈடாகுமாம் செர்ரியின் 250 மி.லி. சாறு. அப்படியானால் அதன் பலன் எத்தகையது என்று பாருங்கள். குட்டிக்குட்டியாக, கருஞ்சிவப்பாக இருக்கும் இந்தப் பழத்திற்கு இவ்வளவு மகிமையா? வியப்பாக உள்ளது இல்லையா?

பலன் மிகு ப்ளம்ஸ்:

செர்ரிப்பழத்தின் கிளைக்குடும்பத்தைச் சேர்ந்ததுதான் ப்ளம்ஸ். ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ப்ளம்ஸ், சிவப்பு நிறம் மட்டுமில்லாமல், கருநீலம், ஊதா, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களிலும் கிடைக்கக் கூடிய இந்தப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே இது சீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சாறு நிறைந்த புதிய ப்ளம்ஸ் உண்பவருக்குப் புத்துணர்ச்சியூட்ட வல்லது. உலர வைத்த ப்ளம்ஸ் 'Prune' என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சுவை மிக்கதே ஆகும்.இதில் அனைத்து வித விட்டமின்களும், (குறிப்பாக விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ) அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் முதலிய தாதுப்பொருட்கள் மிக அதிகமான அளவும், மற்ற தாதுக்களான இரும்பு, துத்தநாகம், செலெனியம் முதலியவையும் அடங்கியுள்ளன. இவை தவிர பலவிதமான அமினோஅமிலங்களும் ப்ளம்ஸில் காணக்கிடைக்கிடைக்கின்றன.

இப்பழத்தில் 'நியோக்ளோரோஜெனிக்' மற்றும் 'க்ளோரோஜெனிக்' அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவை என்பதால், உடலுக்கு மிகுந்த நன்மையளிக்க வல்லவை. இவை நரம்பு மண்டலத்துக்கும், செல்களில் காணப்படும் சவ்வு போன்ற பொருட்களுக்கும் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்கக் கூடியது. இரும்புச்சத்து நிறைந்த இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. இக்கனியில் காணப்படும் 'விட்டமின் ஏ' கண் பார்வையைக் கூர்மையாக்கவும், கண் தொடர்பான குறைபாடுகள் வராமல் தடுக்கவும், தொற்று ஏதும் நேராமல் பாதுகாக்கவும் செய்கிறது.

மேலும் ப்ளம்ஸ் பழமானது கான்சருக்கு எதிராகப் போராடக்கூடிய திறனுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும், கட்டிகளையும் களையவல்லது இக்கனியில் உள்ள வேதிமங்கள். அது மட்டுமல்ல, இதில் உள்ள சில சுத்திரிக்கும் காரணிகள், இரத்தத்தில் உள்ள அசுத்தத்தை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் காரணமாக, இதய நோய் வராமலும் தடுக்கிறது.

'விட்டமின் சி' யை அதிக அளவு பெற்றிருக்கும் இக்கனி, சாதாரணச் சளி, இருமல், இன்ஃப்ளூயன்ஸா என்னும் காய்ச்சல், ஆஸ்த்மா இவற்றுடன், ருமாட்டிக் ஆர்த்ரிடிஸ் எனும் மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்புத்தேய்வு நோய் இவற்றையும் அண்டவிடாமல் தடுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

சிறப்பான ஸ்ட்ராபெர்ரி:

இதய வடிவில் அமைந்துள்ள அழகான பழம் ஸ்ட்ராபெர்ரி. தென் மற்றும் வட அமெரிக்காவில் அதிக அளவு பயிராகும் இப்பழத்தின் சொந்த ஊர் சிலி ஆகும். இது ஏறத்தாழ பதினைந்து வகைகளில் கிடைக்கிறது.

அதிக அளவு 'விட்டமின் சி'யும், பழச்சர்க்கரையும் அடங்கிய பழம் இது. இதன் சாறு ஊட்டச்சத்து மிகுந்த பானமாகும். செர்ரிப்பழத்தைப் போலவே கார்த்தன்மை அடங்கிய இப்பழமானது, உடல் உள்ளுறுப்புக்களை, குறிப்பாக சீரண உறுப்புக்களைச் சுத்தம் செய்ய வல்லது. இக்கனியில் அதிக அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. கண் பார்வைப்பாதுகாப்பு ஸ்ட்ராபெர்ரியின் மற்றொரு பயனாகும்.

இக்கனி, கீல்வாதம், மூட்டுவலி இவற்றைப் போக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் இவற்றுக்கு எதிராகப் போராடும் இதன் மருத்துவக்குணங்கள், மூளையானது சரிவர இயங்கவும் உதவுகிறது. விட்டமின் சி காணப்படும் மற்ற பழங்களைப் போல இதுவும் சளி, காய்ச்சல் இவற்றைப் போக்கப் பயன்படுகின்றது.

மிகச்சிறந்த மணமும், நிறமும், சுவையும் நிரம்பிய இக்கனி, உணவுப்பொருட்கள் கெடாமல் காக்கவும் பயன்படுகிறது.

மேலும் சில பழங்களின் பயன்களுடன், மீண்டும் சந்திப்போம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 03 ஜூன் 2010 00:51 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (5)
PALANGAL
5 வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 22:00
MMAHENDRAN
UNGALIN ENNAPADY EVALUVU SAKTHI ULLA PALANGALAI UNPATHAL PALA VARUTHANGALAI THAVIRKALAM. N AAN THINAMUM PLUMS UNPANE.
உடல் எடை குஙறைய
4 திங்கட்கிழமை, 05 ஜூலை 2010 20:38
மு.கவிதா.
இன்றுதான் பார்த்தேன். இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன்
thanks
3 செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2010 23:52
Marani
Thanks for your useful into
நான்காம் பாகம் எங்கே?
2 புதன்கிழமை, 26 மே 2010 20:52
கவிதா
உங்கள் கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள்,
ஆனால், பழங்களும் பயன்களும் ‍ 4 வெளியிடாமல் 5 வெளியிட்டிருக்கிறீர்களே?
பிரயோசனமான தகவல்
1 புதன்கிழமை, 26 மே 2010 04:21
இளைய அப்துல்லா
முக்கனி தகவல் மிகவும் பிரயோசனம்

வாசகர் கருத்துக்கள், category: "உடல்நலம்"

new law எடை குறைய எளிய வழிகள் - II
புளு பெரி பழங்களின் பயன்கள் பழங்களும் பயன்களும் - 6
reduce the weight எடை குறைய எளிய வழிகள் - II
நல்ல கருத்துக்கள் உற்சாகமாக விழித்தெழ....
உடற்பயிற்சி -உணவுப்பழக்கம் எடை குறைய எளிய வழிகள் - II
எடை குறைய எடை குறைய எளிய வழிகள் - II
nice one... எடை குறைய எளிய வழிகள் - II
எடை குறைய எளீய வழிகள் எடை குறைய எளிய வழிகள் - II
thank you எடை குறைய எளிய வழிகள் - I
Good advice எடை குறைய எளிய வழிகள் - III

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 107 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை