Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

பழங்களும் பயன்களும் - 2

மின்னஞ்சல் அச்சிடுக PDF
Fruitsபழங்களுடைய பயன்களைக் குறித்த சென்ற கட்டுரையில், மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை போன்ற சில பழங்களைப் பற்றிக் கண்டோம். இங்கு மேலும் சில இயற்கையின் கொடைகளைக் குறித்துக் காணலாம்.

அருமையான ஆரஞ்சு: சிட்ரஸ் எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஆரஞ்சு இயற்கை நமக்களித்த சிறந்த பரிசுகளில் ஒன்று. உடல்நலத்தைப் பேணுவதிலும் இதன் பங்கு மகத்தானது. இதன் சுவையோ அனைவரையும் ஈர்க்கக் கூடியது. சீன நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட இக்கனி, உலகின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

ஆரஞ்சில் உள்ள சர்க்கரைப்பொருள் உடலில் உடனடியாகக் கலந்து, தெம்பளிக்கக்கூடியது. உடலில் உடனடியாக உஷ்ணத்தையும், சக்தியையும் தோற்றுவிக்க வல்லது. ஆரஞ்சு சொறி-கரப்பான் இவற்றைப்போக்க வல்லது. உடலுக்கு ஊட்டமளிக்கவல்லது. இதயத்தைப் பலப்படுத்தக்கூடிய இது, பற்கள் தொடர்பான வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது. குறிப்பாக ஈறுகளைப் பாதிக்கும் ஸ்கர்வி என்ற நோய் (விட்டமின் சி குறைபாட்டினால் தோன்றுவது) ஆரஞ்சினைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குணமாகிறது. பொதுவான சளித்தொல்லைகள், இன்ஃப்ளூயன்சா என்ற காய்ச்சல் இவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

காய்ச்சலின் பொழுது கொடுக்கக்கூடிய உணவுவகைகளில் முக்கிய இடம் பிடிப்பது ஆரஞ்சுச் சாறு. குறிப்பாக டைபாய்டு, அம்மை, காசநோய் இவற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக ஆரஞ்சுச் சாறு திகழ்கிறது. உடலின் ஆற்றலைத் தூண்டுதல், சிறுநீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்துதல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் விரைவில் நோய் குணமாகக் காரணியாதல் என ஆரஞ்சின் செயல்பாடு சிறப்பானதாக விளங்குகிறது. கபம், சளி இவற்றினை வெளிக்கொணரவும் ஆரஞ்சு உதவுகிறது.

வயிறு மந்தமாக இருத்தல், மலச்சிக்கல் இவற்றுக்கும் அருமருந்தாக இருப்பது ஆரஞ்சு. கால்சியம், விட்டமின் சி இவை அதிகம் காணப்படுவதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் ஆரஞ்சு வலுவூட்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் 'ஸ்கர்வி மற்றும் ரிக்கெட்ஸ்' போன்ற உடல்நலக்குறைபாடுகளுக்கு தினம் ஆரஞ்சுச் சாறு 15 முதல் 120 மி.லி வரை கொடுப்பது பயன் தரும்.

ஆரஞ்சு ஒரு சிறந்த அழகு சாதனப்பொருளாகவும் திகழ்கிறது. இதன் தோலினைக் கல்லில் தண்ணீருடன் சேர்த்து உரைத்துப் பூச, பருக்கள், வேனல் கட்டிகள் முதலியவை மறையும். ஆரஞ்சுத் தோலினைக் காயவைத்துப் பொடி செய்து, பாசிப்பயறுப்பொடி அல்லது கடலை மாவுடன் கலந்து பூசிவர சருமம் பொலிவினைப் பெறும். மின்னும் மிருதுவான சருமத்தை அடைய விரும்புபவர்கள், ஆரஞ்சுச் சாற்றினை சிறிது தண்ணீருடன் கலந்து முகத்தில் தினமும் பூசி, பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவேண்டும். சில தினங்களிலேயே முகம் பளபளப்பதை உணரலாம்.

சாத்துக்குடி: ஆரஞ்சின் இனமான சாத்துக்குடிப் பழமும் பல மருத்துவ நன்மைகளை உடையது. இது இரத்தத்தைச் சுத்தம் செய்யவும், சீரண உறுப்புகளைப் பலப்படுத்தவும், சீரணக்கோளாறுகளைச் சரி செய்யவும் வல்லது. ஆரஞ்சினைப் போலவே இதன் சாறும் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் பழைய நிலையை மீண்டும் அடையத் தேவையான சக்தித் தருவதோடு, நோய்த்தொற்று பரவாமலும் இது பாதுகாக்கிறது.

தாகம் தீர்க்கவரும் தர்பூசணி: முலாம்பழத்தின் வகையைச் சேர்ந்த தர்பூசணி ஆப்பிரிக்க நாட்டின் தென்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. மேற்புறம் பெரும்பாலும் பச்சையாகவோ, சில பழங்களில் மஞ்சளாகவோ இருக்கும். உள்புறம் சிவப்பான, இனிப்பான சதைப்பற்றான பகுதியை உடையது. பூசணி, பரங்கி போன்றவையும் இதன் இனத்தைச் சேர்ந்தவையே!

தர்பூசணியில் ஆறு சதவீதம் சர்க்கரையும், பெரும்பாலும் நீரும் அடங்கியுள்ளது. இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் என்னென்ன தெரியுமா? விட்டமின் A, B1,B3, B6, B9 மற்றும் C ஆகியவை. எனவே, மாலைக்கண் நோய், கண்பார்வைக்குறைபாடு இவைகளுக்கு சிறந்த மருந்தாக தர்பூசணி விளங்குகிறது. விட்டமின் பி, உடலின் வளர்சிதை மாற்றங்களைக்கட்டுப்படுத்துகிறது, நரம்பு மண்டலங்கள் சரிவரச் செயல்பட உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக்கூட்டுகிறது. ஆக்சிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.

உலகின் வெப்பப்பகுதிகளான ஆப்பிரிக்கா, ஆசியாக் கண்டங்களைச் சேர்ந்த மக்களைக் காப்பாற்றவென்றே இயற்கை அன்னை படைத்தளித்த பழம் இது. வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் வலிப்பு நோய், இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வாதநோய் இவை தர்பூசணியைத் தொடர்ந்து உட்கொள்ளும்பொழுது ஏற்படுவதில்லை.

தர்பூசணியில் உடலுக்கு இன்றியமையாத தாதுப்பொருட்களான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. நிறைவுறாக் கொழுப்பு அடங்கியுள்ளதால் உடல் எடை அதிகரிப்பைக் கட்டுக்குள் வைக்கிறது. உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அதிக அளவு தர்பூசணி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சிற்றலின் அமிலம், இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் காக்கிறது, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தி சரியாக்குகிறது.

இனிப்புச் சுவையுடன் இருந்தாலும், இதில் சர்க்கரைச் சத்து கொஞ்சம் குறைவுதான். மேலும் பொட்டாசியம் முதலிய தாதுப்பொருட்கள், இரத்தத்தில் இன்சுலின் அளவைச் சரியாக்கவும், இரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக, வயிறு நிரம்பிய உணவையும் அளிக்கின்றதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கும் ஏற்ற பழம் இது.

தர்பூசணி அதிக நீர்ச்சத்து உள்ள பழமாகையால், சிறுநீரகத்திற்கும் நன்மை புரிகிறது. இதன் சிவந்த சதைப்பகுதியில் உள்ள கரோடினாய்டுகள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்ற காரணியாகின்றன. குறிப்பாக லைகோபேன் என்ற காரணி புற்றுநோய் வராமல் காப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தர்பூசணி விதைகளில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இவற்றில் மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தேவையான தாதுப்பொருட்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் உள்ளன.

இன்னும் பல பழங்களின் பயன்களுடன் மீண்டும் இப்பகுதியில் சந்திப்போம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 29 மார்ச் 2010 12:52 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "உடல்நலம்"

new law எடை குறைய எளிய வழிகள் - II
புளு பெரி பழங்களின் பயன்கள் பழங்களும் பயன்களும் - 6
reduce the weight எடை குறைய எளிய வழிகள் - II
நல்ல கருத்துக்கள் உற்சாகமாக விழித்தெழ....
உடற்பயிற்சி -உணவுப்பழக்கம் எடை குறைய எளிய வழிகள் - II
எடை குறைய எடை குறைய எளிய வழிகள் - II
nice one... எடை குறைய எளிய வழிகள் - II
எடை குறைய எளீய வழிகள் எடை குறைய எளிய வழிகள் - II
thank you எடை குறைய எளிய வழிகள் - I
Good advice எடை குறைய எளிய வழிகள் - III

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 123 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை