Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

மறந்துவிடாதீர்கள் ஜூலை-23

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இவ்வாரம் தமிழர் பிரதேசங்களில் இடம்பெறவுள்ள தேர்தல் நிலவரங்கள் எப்படி அமையப்போகின்றன என்ற செய்திகள்தான் எல்லா தமிழ் பத்திரிகைகளிலும், இணயத்தளங்களிலும் வந்தவண்ணமுள்ளன.

மிக நீண்ட காலத்தின் பின்னர் நடைபெறுகின்ற தேர்தல் என்பதாலும் தேர்தல் திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்ட கட்சிகளும் பின்னர் அதே அரசின் நீதிமன்றத்தால் போட்டியிட அனுமதிக்கப்பட்ட ஆளும்கட்சியை அலங்கரிக்கும் கட்சிகளும் கடும் பிரச்சார உத்திகளை கையில் எடுத்து தமது கைங்கரியங்களை ஆற்றிவருகின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலே எவ்வளவு பணத்தை செலவழித்து பிரச்சாரத்தை முன்னெடுத்தர்களோ அதே முக்கியத்துவத்துடன் ஆளும் வர்க்கம் அத்தனை அமைச்சர்களையும் வடக்கின் பக்கம் திருப்பி விட்டுள்ளனர்.

அனைத்து அமைச்சர்களும் கடந்த இரண்டு வாரங்களாக சனாதிபதியின் உத்தரவுக்கிணங்க ஒவ்வொரு பிரதேசங்களில் தங்கி நின்று தமது தேர்தல் உத்திகளில் கவனம் செலுத்தியுள்ளனர். வாழ்வாதார கடன்வழங்கல்,பணம்கொடுத்தல்,காசோலை வழங்கல்,இலவச உடைவழங்கல் என ஒவ்வொருவரும் தம்மாலான வழிகளில் முயல்கின்றனர்.

News112

ஈ.பி.டி.பி; அமைச்சரும் சும்மா இருக்கவில்லை. வீதியில் எம்.ஜி.ஆர் ஸ்ரைலில் சைக்கிள் பயணம், கிரிகெட் விளையாட்டு, தேர்தலுக்கு பின்திகதியிடப்பட்ட காசோலை வழங்கல் என தனது வழமையான ஏமாற்றுவேலைகளில் இம்முறையும் ஈடுபட்டுள்ளார்.

இவரைப்பற்றி ஒருவிடயத்தை மாத்திரம் உங்களோடு பகிரலாம் என நினைக்கின்றேன். யாழ்குடாநாட்டிலே வழமையான மண்வளத்தை கொண்டது வடமராட்சி கிழக்கு பகுதி. அங்கே இவரது கட்சி  நடாத்திவரும் அட்டூழியங்கள் எவரையும் அதிர வைத்ததாக தெரியவில்லை.

இவர்கள்தான் அந்த பகுதி காணிகளின் சொந்தக்காராகள் போல அப்பகுதியிலுள்ள மண்ணிணை அகழ்ந்து யாழ்குடாவில் எல்லா பகுதிக்கும் வியாபாரம் செய்து வருகின்றார். இதனை செய்தியாக வெளியிட்டவருக்கு மரணதண்டணைகூட இவரது அமைப்பால் 2010இல் வழங்கப்பட்டது.

இதைப்பற்றி கதைத்தால் எல்லோருக்கும் இதுதான் நடக்கும் என்று மற்றவர்களும் அமைதியாகி விட்டனர் ஆனால் நாம் தொடர்ந்து அமைதியாகவே இருக்கப்போகின்றோமா? இதனை எப்படி அகிம்சை வழியில் தடுப்பது? இங்கே உண்மையாக என்ன நடைபெறுகின்றது? யார்யாருக்கு எவ்வளவு பணம் எப்படி போகின்றது.

News116

ஒருலோட் மணலுக்காக வரியாக ரூ 150.00(*) பிரதேச சபைக்கு வழங்கப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட மண் பின்னர் அவர்களால் வல்லிபுரம் பகுதியில் இன்னோரிடத்தில் களஞ்சியப்படுத்தப்படுகின்றது. அதிலிருந்து தமது வியாபாரத்தை ஆரம்பிக்கின்றார்கள். அங்கே ஒரு லோட் ரூ 6,000.00(*) இலிருந்து ரூ10,000.00வரை அவ்விடத்திலிருந்து விற்பனை செய்யப்படுகின்றது.

அதனை வாங்குபவர்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களான லொறிசொந்தக்காரர்களே. அவர்கள் அதனை பெற்று மேலும் ஒருதொகை வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றார்கள். வழமையாக பெறுவதென்றால் 2தொடக்கம் 5மாதம்வரை மணல் அனுமதிக்காக காத்திருக்கவேண்டும்.

அவசியமாயின் பெருந்தொகை பணத்திற்கு பின்கதவாலும் பெறுவதற்கு சிலஏற்பாடுகளும் உண்டு. இவ்வாறு வாரத்தில் 400-600(*)லோட்வரையான மண் இப்பகுதியிலிருந்து ஏற்றப்படுகின்றது. கடல்நீர்உட்புகுவதுடன் இப்பகுதியிலுள்ள நன்நீர் உவர்நீராக மாறிவரும் அபாயம் அதிகரித்துள்ளது என்பதோடு இப்பகுதியின் சொத்தை கயவர்களை இப்படி அபகரிக்க விடலாமா?

அதாவது மாதாந்தம் 2500லோட் இப்பகுதியிலிருந்து அகற்றப்படுகிறது. அதன் கனவளவு 10000கியுப். மாதாந்தம் இவர்கள் ஈட்டும் குறைந்தபட்ச தொகை(2500 X 6000 = 15,000,000.00) ஒன்றரைக்கோடி ரூபாய்.  இந்த வியாபாரம் இன்று நேற்றல்ல. கடந்த சமாதான சூழல் குழம்பியதிலிருந்து அதாவது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து 5வருடவியாபாரம் இப்படி போகின்றது.

(இதுவரை 1.5கோடி X 12மாதம் X 5வருடம் = அண்ணளைவாக 90கோடிரூபாய்) இப்பணத்தை இவர்கள் என்ன தேவைக்காக பயன்படுததியிருந்தார்கள்? இந்தபணத்தை இப்பகுதி அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு யாராவது சிந்தித்தார்களா?இதனை அனுமதித்ததுயார்? இந்நிதியத்தின் கணக்காய்வை யார் மேற்பார்வை செய்கின்றார்கள்? அங்கிருந்துதான் ஒவ்வொன்றாக செய்திகள் வெளிவருகின்றது.

இதனை யாரும் தட்டி கேட்கமுடியாதபடி அரசின் தலைமைத்துவத்திலிருந்து யாழ் அரச அதிபர்வரை நீண்டு செல்கின்றது பட்டியல். உதயன் நிர்வாகியும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சரவணபவான் அவர்கள் கூட நாடாளுமன்றம் வரை இப்பிரச்சனையை கொண்டுசென்றார். ஆனால் பலன்ஏதும் இல்லை.

News118

நாடாளுமன்றத்தால்கூட எதுவும் செய்ய முடியாதென்றால் நாம் என்ன செய்யமுடியும்? இங்கேதான் பதிலே தங்கியுள்ளது. ஆம் எங்களால் முடியும், நிச்சயம் முடியும். நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் நிச்சயம் முடியும். இன்னும் 2நாட்களில் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில்கூட இக்கட்சியினரே வெற்றிலை சின்னத்தில் எங்கள் வாக்குகளை கேட்டுவந்துள்ளார்கள்.

ஆகவே நாம் மிகவும் விழிப்பாக இருந்து நம் ஒவ்வொருவரின் வாக்குகளையும் - அவர்களுக்கு வழங்காமல் - நமது பிரதேச வளங்களை நமது பிரதேச அபிவிருத்திக்கும் தேசகட்டுமானத்திற்கும் நாமே பொறுப்பாகவிருந்து செய்வதற்கு ஏற்ற ஒரு ஜனநாயக கட்சிக்கு எமது தேசிய தலைவன் தெரிவுசெய்த கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதன் ஊடாக இதனை தடைசெய்யலாம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எம் அன்பான உடன் பிறப்புக்களே! நீங்கள் ஒவ்வொருவரும் உளமார சிந்தித்து வாக்களியுங்கள். பிரதேச சபையின் அனுமதியில்லாமல் யாருமே இப்பிரதேசத்திலிருந்து எதனையும் கொண்டுசெல்லமுடியாது. இந்த ஒரு அகிம்சை வழியை நாம் சரியான வழியில் பயன்படுத்தினால் மாத்திரமே இந்த பேரழிவிலிருந்து நாம் காப்பற்றப்படுவோம்.

இதனை நீங்கள் உங்களோடு மட்டுமில்லாது உங்கள் சொந்தங்கள்,உறவுகள் யாவருக்கும் தெரியப்படுத்துவதனூடாக ஒருவரேனும் தவறாது உங்கள் கடமையை சரியான வழியில் பயன்படுத்துவதனூடாக எங்களுக்கு பாரிய அவலத்தை ஏற்படுத்திய ஜூலை 23 அன்று எமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதோடு எங்கள் தேசத்தின் அழிவை காப்பாற்றும் பெரும்பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றோம்.

இன்றைய நிலையில் இத்தேர்தலில் அரசும், சர்வதேசமும் காட்டிவரும் அக்கறையை தமிழர் தரப்பும் காட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

News114

இந்த தேர்தலைப்பொறுத்தவரை பிரதானமாக போட்டியாளர்கள் இருவர்தான். ஒன்று தமிழர்தேசம் இரண்டாவது சிங்களதேசம். உங்களுக்கும் சிலவேளை குழப்பம் வரலாம். நாம் இங்கே ஆழமாக நோக்கவேண்டியது இவ்விடயமேயாகும்.

அதாவது தமிழ் மக்கள் சார்பாக தமிழர்களுக்காக போட்டியிடும் பிரதான கட்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்மக்கள் உரிமைகளை விரும்பவில்லை அவர்கள் சலுகைகளையே விரும்புகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும் என்று துடியாய் துடிக்கும் ஈ.பி.டி.பி கட்சியும்,கருணா பிள்ளையான் போன்றோரும்,சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதான இடம் வகிக்கின்றார்கள்.

தமிழர் தரப்பு என்றால் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமேயாகும், தமிழர் பிரதிநிதிகளே எனகூறிக்கொள்ளும் டக்ளஸோ,கருணாவோ தமது கட்சி சின்னத்தில் போட்டியிடவே அனுமதியற்றவர்களாகவே அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கைப்பொம்மைகளாக சிங்களப் பேரினவாத கட்சியின் சின்னத்தில் அவர்களுடைய கட்சியின் பெயரிலேயே போட்டியிடுகின்றார்கள்.

யாராவது விரும்பியோ அல்லது வாங்கிய பணத்திற்காகவோ வாக்களிப்பார்களாக இருந்தால் அவர்களின் அந்த வாக்கு சிங்களப்பேரினவாதத்திற்கு வளங்கப்பட்ட வாக்காகவே கருதப்படும்.

அவர்கள் உங்களுக்கு ஏதாவது கொடுப்பனவுகள் தந்தால் அதனை உரிமையோடு பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட பணம். தமிழகத்தில் கருணாநிதி செய்த அதே திருவிளையாடல்களையே இவர்களும் செய்கின்றார்கள். எதைதந்தாலும் வாங்குங்கள் ஆனால் வாக்களிக்கும் போது இதய சுத்தியோடு ஆயிரமாயிரம் அப்பாவி பொதுமக்களினதும் உயிர்நீர்த்த போராளிகளினதும் உயிர்த்தியாகங்களை எண்ணி வாக்களிக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

முடிவு எப்படி அமையும் என்று கருத்துக்கணிப்பு தேவையற்றிருந்தாலும் வெற்றி தமிழர்களுக்கானதே என்று நாம் சும்மா இருந்துவிட்டால் எல்லாம் நடந்துவிடுமா? இங்கேதான் எமது ஒவ்வொருவரினதும் வரலாற்று கடனை நிச்சயம் நிறைவேற்றியே தீரவேண்டும்.

இந்த கடமையை தாயகத்திலுள்ளவர்களால் மட்டும் ஆற்றிவிடமுடியுமா? அவர்கள் அவ்வாறான சூழலில் வாழ்கிறார்களா? அவர்கள் நித்தமும் நெருப்பை வயிற்றில் சுமந்தவண்ணமே பேரினவாதத்தின் கொடிய வலைவிரிப்புக்குள் தமது அன்றாட பணிகளை மாத்திரமே ஆற்றமுடிகின்றது.

அதைவிட அவர்களால் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரமோ,பேசும் சுதந்திரமோ,கருத்துதெரிவிக்கும் சுதந்திரமோ மறுக்கப்பட்ட நிலையில் தமது உணர்வுகளை உள்ளத்தில் சுமந்தவாறும் இன்னும் சிலம் கடந்தகாலத்தை மறந்தவர்களாகவும் திரிகின்றனர். இவ்வாறான ஒரு சூழலில்தான் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதும் புலத்திலிருந்து நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதிலுமே எமது வெற்றியே தங்கியுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த தேர்தலால் பெரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக தமிழர் பிரதிநிதிகளான தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சில் ஈடுபட்டுவரும் அரசிற்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ந்தும் தமிழர் பிரதிநிதுத்துவத்தை வலுப்படுத்துவதன் ஊடாக எமது அபிலாசைகளை ஓங்கி ஒலிக்கச்செய்வதனூடாக எமது உரிமைகளை பெறுவதற்கும் தமிழர்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்.

இந்தியாகூட தமிழர்களுக்கு 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும்படி இலங்கை அரசை வற்புறுத்தி வருகின்றது. இதுகூட தமிழர் மீது கொண்ட அன்பிலோ,கரிசனையிலோ அல்ல. போர்குற்ற விசாரணைகள் வேண்டுமென வலுவாக குரல்கள் ஐநாவில் ஓங்கி ஒலித்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவ்விசாரணை முன்னெடுக்கப்பட்டால் இந்தியாவின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுவிடுமே என்ற ஐயப்பாட்டில்தான் ஏதாவது ஒரு சிறிய தீர்வையாவது வழங்குவதனூடாக இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நல்லாட்சி ஓற்படுத்திவிட்டோம் என்ற மாயையை உருவாக்கி தாம் தப்பிவிடவே இந்தியா ஆசைப்படுகின்றது. இப்போது எல்லோருடைய அரசியல் காய் நகர்த்தல்களுக்கும் நாம்தான் பகடைக்காய்களாக உள்ளோம் ஆகவே நன்றாக சிந்தித்து நாம் எடுக்கும் முடிவிலேயே எம் இனத்தின் வெற்றி தங்கியுள்ளது.

உங்கள்

ஊரிலிருந்து

சக்கரவர்த்தி

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

விளக்கப்படம் இங்கே

* - உண்மையான தொகை இதனிலும் அதிகம் என்கிறது பிந்திய தகவல்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 00:31 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

darling.vj@gmail.com ஈழத் தமிழரை மறந்த மன்மோகன்!
result for tamil ealm சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
speed சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
கற்க வேண்டிய பாடங்கள் சிங்களத்திடம் கற்க வேண்டிய பாடங்கள்
please சத்தியவேள்விக்கு சவால்விடும் "தமிழ்த்தேசியம்"
குட்டித் தீவும் மனித வாழ்வும் குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!
உலகத் தமிழர் அமைப்புகள உலகத் தமிழர்களை உசுப்பி விடும், சிங்களப் பேரினவாதம்!
சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு சுய மதிப்பீட்டுக்கு முன்வருமா கூட்டமைப்பு?
புரிதலின் ஆரம்பம்..... சரியில்லாமல் போன மகிந்தவின் ‘ரைம்‘

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 157 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை