கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு கண்ணீர் அஞ்சலி.. ஒரு புலிப் போந்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..? * * * * * மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது; உன்- பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று.. சூளுரைத்து - சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது; நீல இரவில் - அது நிலாச் சோறு தின்னாமல் - உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் - சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது; அம்மா! அதற்கு நீயும் - அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு, தினச் சோறு கூடவே இனச் சோறு ஊட்டினாய்; நாட்பட - நாட்பட - உன் கடைக்குட்டி புலியானது; காடையர்க்கு கிலியானது! * * * * * தம்பி! தம்பி! - என நானிலம் விளிக்க நின்றான் - அந்த நம்பி; யாழ் வாழ் - இனம் இருந்தது - அந்த.. நம்பியை நம்பி; அம்மா! அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா - உன் கும்பி! * * * * * சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை.. ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி; அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி; செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி; அவர்கள் வாழ்வை வெட்ட வெளியினில் நிறுத்தி வெப்பாக்கி; மான உணர்வுகளை மப்பாக்கி; தரும நெறிகளைத் துப்பாக்கி - வைத்த காடையரை வீழ்த்த... தாயே உன் தனயன் தானே - தந்தான் துப்பாக்கி! * * * * * இருக்கிறானா? இல்லையா? எனும் அய்யத்தை எழுப்புவது இருவர்; ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத் தமிழர்க்கு அரும்பொருள் ஆன பிரபாகரன்! * * * * * அம்மா! இந்த அவல நிலையில் - நீ.. சேயைப் பிரிந்த தாயானாய்; அதனால் - பாயைப் பிரியாத நோயானாய்! வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி வந்தால் சென்னை அது - வரவேற்கவில்லை உன்னை! வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது! * * * * * இனி அழுது என்ன? தொழுது என்ன? கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித் தாயே! - இன்றுனைப் புசித்துவிட்டது தீயே! நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி; உனக்குத் தங்க இடம் தராத - எங்கள் தமிழ்மண் நிரந்தரமாய்த் தேடிக் கொண்டது பழி!
- கவிஞர் வாலி
நன்றி : ஜூனியர்விகடன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















dream the word freedom..
thmamizh unarvu ullavarkalukkuththan thamizhum kavithaiyum sonthamaahum..
you and karunanithy are in the same line..
he wrote condolence kavithat to thamizh selvan.. we "tamizhs..it means real thamizhs never ever bothered about it..
this is also the same..neelikanneer..
be practical mr,vaali..
penum paperum kidaithaal athaiyum eluthuvatha?..vaendaam..
we never ever bother about this kavithai..too
be practical..
finally
buld your own house on your own soil
rathar than bulding a palace on somebody's grave.