Flash Image

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

அங்காடித்தெரு - ஒரு பார்வை

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நாம் வாழும் காலத்திலேயே நம் கண்  முன்னால் அரங்கேறிவரும்  துயர நாடகம் ஒன்றை , அதிக கவனத்திற்கு  கொண்டுவரப்படாத ஒன்றை கதைகளனாகத் தேர்ந்தெடுத்த இயக்குனர்  வசந்தபாலனைப் பாராட்டியே ஆகவேண்டும். இதுபோன்ற கதைகளை தயாரிக்க பணம் தர சம்மதித்த ஐங்கரன் தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியனுக்கும் கருணாமூர்த்திக்கும் கூட நன்றி சொல்லவேண்டும். பதியப்படாத விசயங்கள், அல்லது பதிந்தே ஆகவேண்டியவைகள் என்று இன்னும் எவ்வளவோ வாழ்வின் துயரங்களும்,  நிதர்சனங்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவை ஒரு நொடியேனும் ஒரு மனித உள்ளத்தில் மின்னலாக வந்துபோனாலும் அது பற்பல மாற்றங்களை உண்டாக்கவல்லது.

angadi-theruஅப்படியொரு மாற்றத்தின் ஒளி இப்படம், பார்த்த பலரின் உள்ளத்தில் மின்னலாக வெட்டியோ அல்லது விதையாக விதைத்தோ சென்றிருக்கலாம். சென்னை போன்ற  பெருநகரத்தில் மக்கள் அலைமோதும்  ஒரு கடைத்தெருவும் அதனை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு இயங்கும் உயிர்களையும் அங்காடித்தெரு நம் கண் முன்னே விரிக்கிறது. சிறு நகரங்களின் வறுமையும் அதனால் அவர்கள் நாடும் பெருநகரம், அவர்கள் மேல் நிகழ்த்தும் வன்முறையும் இதயத்தை உருக்கக்கூடிய நிகழ்வுகள்.

தன் மகனையாவது  படிக்க வைத்து தன் குடும்ப வறுமையை மாற்றப்போராடும் ஒரு தந்தை. அக்கனவுகள் ரயிலோடு சேர்த்து சிதைக்கப்பட குடும்பத்திற்காக கதாநாயகன் சென்னையின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு வேலைக்குச் சேர்கிறான். தந்தையில்லாத  குடும்ப பொறுப்புகள் நிறைந்த பையன்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும் தேர்வுதினத்திலேயே அவர்கள் எதிர்நோக்கும் கொடுமைகளைக் கோடிட்டுக் காட்டிவிடுகிறார்கள். சென்னையில் வந்திறங்கும் அந்த கள்ளம் கபடமற்ற உள்ளங்கள்  வாழ்வுப்பிச்சை அளித்து இங்கே அழைத்து வரப்பட்டதாக அறிவிக்கும் முதலாளியின் பேச்சுக்கு மஞ்சத்தண்ணி ஊற்றிய ஆடுகள் போல தலையாட்டி ஆமோதிக்கின்றனர். காற்றில்லாத நெருக்கடியான கொடவுன்களைக் கண்டு மிரள்கிறார்கள். உணவுக்காக எச்சில் தட்டுகளுக்கு வரிசையில் நிற்கிறார்கள். ஆட்டு மந்தையைப்போல ஒருவன் காலடியில் ஒருவன் என படுத்து உறங்குகிறார்கள்.

இருந்தும் குடும்பமும்  வறுமையும் அத்தனையையும் தாங்கிக்கொள்ளச் செய்கிறது. கொடவுனிலிருந்து பதவியுயர்வில் ஏசி தளத்திற்கு மாற்றப்பட்டதாக நினைக்கும் அவர்களுக்கு அது தான் மிகப்பெரிய எண்ணைக்கொப்பரை என்று அறிவுத்த வருகிறாள் கதாநாயகி. அங்கிருக்கும் எம கிங்கரன் கருங்காலி மேனேஜரைப் பற்றி வேலை செய்பவர்கள் சொல்லும் போது புரிந்து கொள்ளாமல் பின் கதாநாயகிக்கு கிடைத்த அசிங்கமான தண்டனையின் போது முழுதுமாக உணர்ந்து கொள்கிறான். ஆண்களென்றால் அடி உதையும் பெண்களென்றால் மேலே கைவைத்தலுமென அந்த மின்விளக்கு அலங்கார மாளிகையின் திரைமறைவில் நடந்தேறுகின்றன வன்கொடுமைகள்.

 

Angadi_Theru2ஒரு பெண்ணின் கஷ்டமான சூழ்நிலையை உணர்ந்துகொள்கிறவன் அவளுக்காக கருங்காலி மேல் மூட்டையை போட்டவன் என அவளுக்கு நெருங்கியவனாக மாறுகிறான். பதிமூன்று வயதில் தங்கை வீட்டு வேலை செய்ய, தானோ மேலே கை வைக்கும் மேனேஜரை சகித்து வாழும் கொடுமை அப்பெண்ணுக்கு. படத்தின் பாடல் வரிகளில் நா. முத்துக்குமார் அழகாகச் சொல்வது போல கூண்டுக்குள் வாழும் அவர்களின் கண்ணுக்குத் தெரிகிற ஒரு துண்டு வானமாக அவர்களின் மெல்லிய காதல் மலர்கிறது.

நண்பனின் காதல்  கடையின் விதிகளுக்கு பலியாகிறது. வாழ்க்கையின் பணத்தேவையும் குடும்பத்தின் பசியும்  முட்டித்தள்ள மேனேஜரிடம் தான் அவள் காதலன் அல்ல எனக்காட்ட காதலியை வேசி என திட்டவைக்கிறது. பலநாட்கள் மறுத்து பின் மனம்  மாறி காதலிக்க ஒத்துக்கொண்ட அச்சிறுபெண் மனமொடிந்து மேற்கொள்ளும் தற்கொலை, அந்நிகழ்வின் சாட்சியாக நின்ற கதைநாயகன் நாயகின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகிறது. காதலைப் பகிர்ந்து கொண்ட தினத்திலேயே ஊடலும் பிரிவும் நேர்கிறது.

தன் நிலையை நேரடியாக விளக்கி ஒன்று சேர்ந்த  அவர்களின் காதல் கடை  மேனேஜரிடமும் முதலாளியிடமும் சிக்கி அடி உதைபட நேரும்போது அதை எதிர்கொண்டு மீண்டு வெளியே வருகிறார்கள். வாழ்க்கையில் சொந்தக்காலில் நிற்க முயன்ற அவர்களுக்கு வாழ்வின் விதியின் கோரப்பற்களில் சிக்கி பாதையோரத்தில் மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்தேறுகிறது. அப்போதும் மனம்தளராத அவர்கள்  வாழ்வின் மேல் கொண்ட நம்பிக்கை ஆச்சரியமானதும் அதே சமயத்தில் நிதர்சனத்தில் நிகழ்ந்து வருவதுமாகும்.

ஒரு சிறு காட்சியும் கூட தேவையற்றது இல்லை. கண் தெரியாத தாத்தா, குள்ளமான மனிதர் அவரின் மனைவி, கழிப்பிடம் கழுவி வாழ்வை நடத்தும் பெருமாள் என ஒவ்வொரு சிறு கதாபாத்திரமும் கதையின் போக்கை சரியாக உணர்த்தும் காரணிகளே! அவர்களின் நடிப்பும் அசாத்தியமானது.  ஜெயமோகனின் வசனங்களிலும் எங்கும் அதிகப்படியான வார்த்தையாடல்கள் இல்லை.  ‘இந்த ஆம்பிளையிடமாவது மான ரோசத்துடன் இருக்கிறேனே ‘ எனக்கூறும் கதாநாயகின் வார்த்தைகள் நறுக் சுறுக். காதல் மலர்ந்து வரும் இருவருடைய பேச்சில் உள்ள யதார்த்தம் ரசிக்கத்தகுந்தது. எத்தனை பேரை உன் பின்னால் அலைய வைத்தாய் என்று ஆணும் எத்தனை பேர் பின்னால் நீசுற்றி இருப்பாய் எனப் பெண்ணும் கேட்டுக்கொள்வதும், அடுத்தவர் தோற்ற காதலின் முதல் பரிசுகளையே மீண்டும் அவர் விருப்பமாக எண்ணி பரிசளித்துக் கொள்வதுமான கவிதைக் காட்சிகள்.

ஜோதிலிங்கம் என்கிற பெயரைக்காட்டிலும்  கதாநாயகி அழைக்கும் இட்டமொழிக்காரரே தான் மனதில் பதிகிறது. மகேஷுக்கு கள்ளம்கபடமற்ற முகம், முதல் படமென்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சேர்மக்கனியாக வரும் அஞ்சலி கதைகளைப் பேசும் விழியெனச் சொல்ல மிகத்தகுதியானவர். முகபாவங்கள் அவரை சிறந்த நடிகை என உணர்த்துகிறது.  மிகத்தெரிந்த முகமான பாண்டி அனைவரையும் கவர்கிறார். பாண்டியின் சௌரி முடி பரிசும்  அவரின் காதல் உருக்கமும் அதனை நயமாக மறுக்கும் காதலியும் மிக அழகு. பாண்டியின் காதலியாக வரும் சோஃபி என்கிற சுகுணா இயல்பான நடிப்பு. காதலிக்கப்படுகிற ஒவ்வொரு பெண்ணும் காட்டும் நாண அழகை அழகாக ப்ரதிபலிக்கிறார்.

கருங்காலியாக  வரும் நடிகர், யாரப்பா  இவர்? எனும்படி விழிகளை உருட்டி  மிரட்டுகிறார். அவர் இயக்குனர்  ஏ.வெங்கடேஷ் பல கமர்ஷியல்  படங்களை இயக்கியவர். இளைய தலைமுறை பாடகர்களின் இனிமையான குரல்களில்   "கதைகளைப்  பேசும்" ஜிவி ப்ரகாஷும் , "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" விஜய் ஆண்ட்டனியும் என அழகான பாடல்களை தந்திருக்கிறார்கள். பாடல்வரிகளில் வழக்கம்போலவே நா முத்துக்குமார் முத்திரை பதித்திருக்கிறார். கூட்டமான கடைவீதிகளையும் கதைக்களத்தையும் அப்படியே அழகாக ரிச்சர் மரியநாதன் கேமிராவில் பதிந்திருக்கிறார்.  ஆர்ட் டைரக்டர் ஜிகே முத்துராஜ் அவர்கள் காட்சிகளின் உண்மைத்தன்மைக்கு மிக உதவி இருக்கிறார்.

அங்காடித்தெரு வாழ்வின் துயரங்களை ஒருதட்டிலும் வாழ்வின் சிறு சிறு மகிழ்ச்சித்தருணங்களை நம்பிக்கைகளை ஒரு தட்டிலும்  வைத்து சமமாகத்தருகிறது.

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 12 மே 2010 20:05 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
அஙகடி தெரு....சிறந்த விமர்சனம்
1 வெள்ளிக்கிழமை, 14 மே 2010 06:15
அருள்
சிறப்பான விமர்சனம் தந்த கயல் லஷ்மிகு என் வாழ்த்துக்கள்.....

வாசகர் கருத்துக்கள், category: "சினிமா"

comments குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்
கொச்சை படுத்தப் பட்ட ராவணன் ராவணன் - ஒரு பார்வை
Non-Missable Film in Life ராவணன் - ஒரு பார்வை
அஙகடி தெரு....சிறந்த விமர்சனம் அங்காடித்தெரு - ஒரு பார்வை
நல்ல விமர்சனம் 3 இடியட்ஸ் திரைவிமர்சனம்
ஈர‌ம் ஈரம் - திரைப்பார்வை
ஜோவுக்கான மறுமொழி உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
நகைச்சுவை படங்கள் உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை
மிக நன்று நாடோடிகள் - விமர்சனம்
அருமை குறும்படம் விமர்சனம்

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 88 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை