Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
money_tender_currencyநிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப்பு' (NAV) குறித்த தெளிவினைப் பெற்றிருத்தல் அவசியம். ஒரு அறிவுக்கூர்மையுள்ள விவரமறிந்த முதலீட்டாளருக்கு NAV எவ்வளவு பயனளிக்குமோ அதைவிட அதிகமாக அதைப்பற்றி ஏதும் அறியாத முதலீட்டாளருக்கு அது ஊறு செய்யவும் கூடும்.

நிகர சொத்து என்பது ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களில் (Total Assets) இருந்து அந்நிறுவனத்தின் கடன்களைக் (Liabilities) கழித்தது போக மிச்சமுள்ள சொத்துக்கள். அதாவது, முதலீடுகள், பிற நிறுவனங்களில் வாங்கியுள்ள பங்குகள், சேமிப்புகள், வழங்கிய கடன்கள், நிலம் மற்றும் கட்டிடங்கள், வங்கிக்கையிருப்பு இவை அனைத்தும் சொத்துக்களின் கீழ் வகைப்படுத்தப்படும். இவற்றின் மொத்த மதிப்பு கணக்கிடப்படும். பின், அந்த நிறுவனத்தில் பங்குதாரர்கள் செய்துள்ள முதலீடு, நிறுவனம் வாங்கியுள்ள கடன்களின் நிலுவைத்தொகைகள், அதாவது பிறருக்குக் கொடுக்கப்படவேண்டியவை அனைத்தும் நிறுவனத்திற்குப் பற்று ஆகும். மொத்த சொத்து மதிப்பில், பற்று இனங்களைக் கழித்தபின் மீதமிருப்பது நிகர சொத்து ஆகும். இந்த நிகர சொத்தினை, நிறுவனத்தில் முதலீடு செய்யப்பெற்றிருக்கும் மொத்தப் பங்குகளால் வகுக்கும்பொழுது கிடைப்பதே நிகர சொத்து மதிப்பு, அதாவது NAV என்று அழைக்கப்படுகின்றது.

பரஸ்பர நிதியங்களைப் பொறுத்தவரை, பொதுவாக அந்த நிறுவனம் முதலீடு செய்திருக்கும் பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றின் சந்தை மதிப்பு (Market Value) கணக்கிடப்படுகின்றது. இது திறந்த முனை நிதித்திட்டங்களின் (Open Ended Schemes) மதிப்பைக் காண உதவுவதாகும். மூடிய முனை நிதித்திட்டங்களுக்கும் (Closed Ended Schemes) NAV உண்டெனினும் அது இந்த முறையில் கணக்கிடப்படுவது இல்லை. இந்த சந்தை மதிப்பினை, அந்தத் திட்டத்தின் கீழ் விற்கப்பட்டுள்ள மொத்தப் பங்குகளால் (அலகுகளால்) வகுக்கும்பொழுது, அக்குறிப்பிட்ட அலகு (Unit)அல்லது பங்குக்கான நிகர சொத்து மதிப்பு கிடைக்கிறது. முதலீட்டு நிறுவனமானது, தங்கள் நிறுவனத்தின் அலகுகளை, NAVயை விடக்குறைந்த விலையிலோ (Discounted Rate) அதிக விலையிலோ (Premium) விற்பனை செய்யலாம்.

ஆனால் பொதுமக்கள் பலர் இந்த நிகர சொத்து மதிப்பு என்ற கருத்தை, அதன் கணக்கிடும் முறையை, அதன் கூறுகளை (Concepts) சரிவரப் புரிந்துகொள்வதில்லை. பலர் குறைந்த NAV சிறந்தது என்றும் அதிக NAV அபாயகரமானது என்றும் கூடக் கருதுவது வியப்பிற்குரியது. பரஸ்பர நிதியங்களின் அலகுகளின் NAVயும் , பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் பங்குகளின் மதிப்பும் ஒரே விதமானது என்றும் பலர் கருதுகின்றனர். ஆனால், இது உண்மையல்ல . இவை இரண்டும் வெவ்வேறானவை.

பங்குகளின் மதிப்பு என்பது சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கும் சுழற்சிக்கும் ஏற்பட மாறுபடக்கூடியது. நிறுவனங்களின் எதிர்கால வாய்ப்பு, சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளுக்கு உள்ள தேவை, இவற்றுடன் ஒரு நாட்டின் அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த அனுமானங்கள் இவை அனைத்தையும் பொறுத்தது பங்குகளின் விலை. முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில்நுணுக்க ஆய்வினை (Technical Analysis), வரைபடங்களை (Charts) , அட்டவணைகளைப் (Tables) பயன்படுத்தி, பங்குகளின் மதிப்பைக் கணக்கிட்டு அதில் முதலீடு செய்கின்றனர். பல சமயங்களில் வதந்திகளை நம்பிக்கூட விலை ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது.

ஆனால் நிகர சொத்து மதிப்பு என்பது அத்தகையதல்ல. இதுவும் தினப்படி கணக்கிடப்படுகிறது, நாள்தோறும் மாற்றமடைகிறது என்பது ஒன்றுதான் பங்குகளின் மதிப்பிற்கும், பரஸ்பர நிதிய அலகுகளின் NAVக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி NAVயானது ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிதித்திட்டத்தின் கீழ் செய்திருக்கும் முதலீடுகளின் அன்றைய தின சந்தை மதிப்பு, அந்தக் குறிப்பிட்ட நிதித்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை இரண்டுக்கும் உள்ள விகிதமாகும்.

எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், 'ABC பரஸ்பர நிதியமானது, தமது X என்ற திட்டத்தின் கீழ் செய்திருக்கும் முதலீடுகளின் மதிப்பு ரூபாய் ஐம்பது இலட்சம், அந்தத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சம் எனில், அந்தக் குறிப்பிட்ட X என்ற திட்டத்தின் கீழுள்ள அலகுகளின் NAV = 50 லட்சம் / 50 ஆயிரம்; அதாவது ஒரு அலகின் NAV ரூ. நூறு ஆகும்.


இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி. பரஸ்பர நிதி நிறுவனமொன்றின் ஒரு திட்டமான 'அ' வின் NAV ரூ.20 எனவும், மற்றொரு திட்டமான் 'க' வின் NAV ரூ. 25 என்றும் கொண்டால், அதற்கு என்ன பொருள்? இந்த விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இப்பொழுது வலுவாக உள்ள திட்டம் எது?

இதற்கான விடை மிகவும் சுலபமானது. இரண்டு திட்டத்திலும் உள்ள அலகுகள் ஆயிரம் என்று கொள்வோம். திட்டம் 'அ'வின் தொகுப்பு நிதி (Corpus Fund), அதாவது நிகர சொத்தானது ரூ. 20 X 1000 = 20000 ரூபாய். இதுவே 'க' என்ற திட்டத்தின் நிகர சொத்து (தொகுப்பு நிதி) ரூ. 25 X 1000 = 25000 ரூபாய்.

இப்பொழுது உங்கள் பதில் என்னவாக இருக்கவேண்டும். 'திட்டம் க' தானே?

அப்படியானால், நீங்கள் முதலீடு செய்ய 'க' என்ற திட்டத்தைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டுமா? கட்டாயமில்லை.
ஆனால், இங்கு ஒரு தகவலைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். நிகர சொத்து மதிப்பு என்பது கடந்தகாலச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ஒன்று. கடந்தகாலத்தில் மிக மோசமாகச் செயல்பட்ட நிதித்திட்டம் வருங்காலத்தில் பெரும் லாபம் ஈட்டாது எனவோ, இப்பொழுது மிகுந்த லாபம் ஈட்டிவரும் ஒரு திட்டம் வருங்காலத்திலும் லாபம்தான் ஈட்டும் எனவோ உறுதியாகக் கூற இயலாது.

எனவே, ஒரு பரஸ்பர நிதியத்தை, அதில் உள்ள நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, அதன் நிகர சொத்தினை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல், அந்நிறுவனத்தின் தரம், அதன் நிதிநிர்வாகக்குழு, அவர்களது கடந்தகாலச் செயல்பாடுகள், அந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அவர்கள் முதலீடு செய்யவிருக்கும் பங்குகளின் வகை (அதாவது பங்குச்சந்தையிலா, கடன் பத்திரங்களிலா, இரண்டிலுமே எனில் அவற்றின் விகிதாசாரம் என்ன) இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளுவது அவசியம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 23:40 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 82 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை