Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
coinsபரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

பரஸ்பர நிதியங்களைத் தேர்ந்தெடுப்பதில் பல நிலைகள் இருக்கின்றன. உங்கள் இலக்குடன் அந்த நிதியத்தின் திட்டம் ஒத்து வருகின்றதா? நிகர சொத்து மதிப்பு (NAV) என்ன? அவர்களின் செயல்பாடு கடந்த வருடங்களில் எப்படி இருந்தது? அவர்கள் கொடுக்கும் பங்காதாயம் எவ்வளவு? குறைந்த பட்ச Lock in Period எவ்வளவு? அவர்கள் கட்டணங்கள் எப்படியுள்ளன? நிதியத்தின் குறைந்த அளவு முதலீடு என்ன? அவர்கள் எந்தவிதமான பங்குகளில் எந்த விகிதத்தில் முதலீடு செய்கிறார்கள் என்ற ஏராளமான கேள்விகளுக்கு நீங்கள் விடை தெரிந்துகொண்டு ஒரு பரஸ்பர நிதியத்தின் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்.

முதல் படி: உங்கள் இலக்குடன் அந்த நிதியத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் திட்டத்தின் இலக்கு ஒத்திருக்கிறதா? அதாவது உங்கள் இலக்கு நீண்டகால, பாதுகாப்பான சேமிப்பு என்று வைத்துக்கொள்வோம். அந்த நிதியத்தின் திட்டம், பங்குச் சந்தையில் சமநிலைப்பங்குகளில் அதிகம் முதலீடு செய்கிறதா? கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். கடன் பத்திரங்களில் செய்கிறது என்றால் அது உங்கள் இலக்குடன் அதாவது பாதுகாப்பான, நிலையான வருமானம் தரும் முதலீட்டில் ஈடுபடுகிறது. இதுவே அதிகமான 'ஆப்ஷன்ஸ், ஃப்யூச்சர்களிலும், ஈக்விடி பங்குகளிலும் முதலீடு செய்யுமானால் அது உங்கள் இலக்கிற்கு சம்பந்தமில்லாத முதலீட்டுத் திட்டம்.

இரண்டு : கடந்தகால செயல்பாடுகளை மதிப்பிடுங்கள். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும்பொழுது யாராக இருந்தாலும் நல்ல வருமானத்தை ஈட்டலாம். ஆனால் சந்தையின் சரிவின்பொழுது ஒரு நிறுவனம் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவேண்டும். சந்தைப்போக்கு காளைப்போக்காக இருக்கையில் 30 முதல் 40 சதம் வரை லாபம் ஈட்டிவிட்டு கரடிச்சந்தைப் போக்கின் பொழுது ஒரு நிறுவனம் நட்டமடைந்துள்ளதாகக் கொள்வோம். மற்றொரு நிறுவனம் எல்லாக் காலங்களிலும் சராசரியாக 15 முதல் 25 சதம் வரை லாபம் ஈட்டியிருப்பதாக எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? கண்டிப்பாக இரண்டாவதைத் தானே?

அது மட்டுமல்ல. ஒவ்வொரு நிதியமும் பல திட்டங்களை வைத்திருக்கும். இதில் குறுகிய காலத்திட்டங்களில் நன்கு செயல்பட்டவை என்னென்ன, நீண்ட காலத்திட்டங்களில் நன்கு செயல்பட்டவை எவை, 3 முதல் 5 வரையான வருடங்களில் நன்முறையில் லாபம் ஈட்டியவை எவை என்பதையெல்லாம் அலசி, சராசரியாக அனைத்துத் தரப்பிலும் லாபகரமாக இருந்த நிறுவனம் எதுவோ அதில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஏனெனில் ஒத்த, சீரான் (consistent) லாபம் நல்ல அனுபவமும், செயல்திறனும் உள்ள நிதிநிர்வாகிகள் அந்த நிறுவனத்தில் இருப்பதைக்குறிக்கிறது.

பரஸ்பர நிதியங்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த வகையான பங்குகளில், எத்தகைய விதமாகச் செயல்பட்டுள்ளன எனவும் ஒத்திட்டு நோக்க வேண்டும். உதாரணமாக, மென்பொருள் நிறுவனங்களில் ஒரு நிதியம் மேற்கொண்ட குறுகியகால முதலீடு லாபம் ஈட்டியுள்ளதைக்கொண்டு, நாளை கட்டுமானத் திட்டங்களில் அந்த நிறுவனம் மேற்கொள்ளும் முதலீடுகளும் லாபமே அடையும் என்று கருதுவது இயலாது. அவ்வாறே எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த அளவுகளில் பொதுவாக அவர்களால் திரட்டப்பட்ட நிதியானது முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ளுதல் அவசியம்.

அதேபோல், சமீபத்தில் நிறுவனத்தைத் தொடங்கி, ஏராளமான லாபம் காட்டிவரும் நிறுவனங்களை விட, பல வருடங்களாக நிலைத்திருக்கும் நிதியங்களில் முதலீடு செய்வது நல்லது. பலவிதமான சந்தை நிலவரங்களையும், காளைப்போக்கு, கரடிப்போக்கு, கோழிப்போக்கு, அமைதியான சந்தை, ஆர்ப்பரிக்கும் சந்தை எல்லாவற்றையும் பார்த்து எதிர்நீச்சல் போட்ட நிறுவனங்கள் எப்பொழுதும் பாதுகாப்பானவை. "Old is Gold" அல்லவா?

அடுத்தபடியாக ஒரே ஒரு பரஸ்பர நிதியத்தில் தமது அத்தனை முதலீட்டையும் செய்வதை விட, நல்ல நிறுவனங்கள் என்று கருதும் இரண்டு அல்லது மூன்று நிதியங்களில் தமது முதலீட்டைப் பகிர்ந்து போடுவது சாலச் சிறந்தது. இதனால் உங்கள் பணம் 'Diversify' ஆகிறது.

நீங்கள் ஒரு நிதியத்தைத் தேர்ந்தெடுக்குமுன் அதன் நிர்வாகம் யாரிடம் உள்ளது என்று தெரிந்துகொள்வது முக்கியம். முன்பின் தெரியாத நிறுவனங்களில் பணத்தைப் போடுவதை விட, பல வருடங்களாக அனுபவம் பெற்ற நிறுவனங்களின், கீழ் இயங்கும் துணை (Subsidiary) நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது.

ஒரு பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர், அவர்கள் கட்டண விகிதங்கள், செலுத்த வேண்டிய குறைந்தபட்சத்தொகை, குறைந்தபட்சம் எத்தனை காலம் நிதி முடக்கப் படவேண்டியிருக்கும் முதலியவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அங்கு முதலீடு செய்யலாமா வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும்.
முக்கியமான ஒன்று, நீங்கள் ஈக்விடி பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால் பொறுமையாக இருப்பது அவசியம். குறுகிய கால லாபத்தைப் பார்க்காமல் நீண்ட கால லாபத்தை மனதில் கொள்ளுங்கள். அடிக்கடி ஒரு நிதியில் இருந்து எடுத்து மற்றொன்றில் போடுவது, அடிக்கடி நிறுவனத்தை மாற்றுவது இவை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது. அது பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்ப்பதற்கு ஒப்பானது.

(பின் குறிப்பு: ஒரு நண்பர் பரஸ்பர நிதியங்கள் மூழ்கவே மூழ்காது என்பது உண்மையா என்று கேட்டிருந்தார். பொதுவாக, பங்குகளில் இருக்கும் அபாயத்தை விட பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடு பாதுகாப்பானது. அவர்கள் நம்மிடமிருந்து பணம் திரட்டி, பங்குச்சந்தையில்தான் போடுகின்றனர் என்றாலும், அதிக அளவில் திரட்டப்படும் நிதி பங்குச் சந்தை(Stock Market), பணச்சந்தை(Money Market), கடன் சந்தை(Debt Market) போன்ற பலவற்றிலும் ஈடு படுத்தப் படுகிறது. எந்த ஒரு நிறுவனமானாலும் அதில் வெற்றி தோல்விகளுக்கான வாய்ப்பு அங்கு பணி புரிபவரைப் பொறுத்தது. ஒரு சிறந்த நிதி நிர்வாகியை (Fund Manager) உடைய பரஸ்பர நிதி கிட்டத்தட்ட வாத்துக்கு ஒப்பானதுதான்.)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 06 ஜனவரி 2010 12:22 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
பங்குச் சந்தையில் முதலீடு
2 செவ்வாய்க்கிழமை, 11 மே 2010 16:30
மு. சிவபாலசுப்பிரமணியன்
உங்களுடைய பங்குச் சந்தை பற்றிய கட்டுரை மிக நன்று.
London stoke market
1 வெள்ளிக்கிழமை, 08 ஜனவரி 2010 11:18
Prathees
Dear பாலகார்த்திகா

You are writing well ,why don’t want to write about Stock market any more ?Kindly write about London stoke market Please. I got many question about stock market Thank you

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 81 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை