Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

பங்கு வர்த்தகத்தின் வகைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
sharemarketபங்குச் சந்தையில் ஈடுபடுவோரை, இரு வகையாகப்பிரிக்கலாம். அவையாவன:

அ) பங்கு வர்த்தகர்கள்கள்

ஆ) பங்கு முதலீட்டாளர்கள்
பங்குகளை வாங்கும் யாராயிருந்தாலும் அவர்கள் அடிப்படையில் பங்கு வர்த்தகர்கள்தான் என்றாலும், அவர்கள் அப்பங்குகளை வைத்திருக்கும் கால அளவுகள், நோக்கங்கள் இவற்றின் அடிப்படையில், பங்கு வணிகர்கள் என்றும், பங்கு முதலீட்டாளர்கள் என்றும் நாம் கூறலாம்.

முதலீட்டாளர்களை குறுகிய கால முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீட்டாளர்கள் என மீண்டும் இரண்டாகப் பகுக்கலாம். விலை சரியும்பொழுது/பங்குச்சந்தை கரடிப்போக்கில் இருக்கும்பொழுது பங்குகளை வாங்கி, தாம் எதிபார்க்கும் அளவுக்குப் பங்குகளுடைய விலை ஏறியவுடன் விற்று லாபத்தைப் பதிவு செய்துவிடுவது(Profit Booking), குறுகிய கால முதலீட்டாளர்களின் நோக்கம். இவர்களது முதலீடு பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பங்கில் (Stock/Share)ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரையே இருக்கும்.இவர்கள் எத்தகைய பங்கு அதிகமாக வர்த்தகம் ஆகுமோ, எது அதிக ஊசலாட்டத்தை உடையதோ, அத்தகைய பங்கில் அதிக ஆர்வம் காட்டுவர்.ஒரு நிறுவனத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், காலாண்டு/ஆண்டு அறிக்கைகளால், பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய உயர்வு,நாட்டில் நிதித்துறையில் வரக்கூடிய மாறுதல்கள் இவற்றை மனதில் கொண்டு குறுகிய காலமுதலீடுகள் செய்யப்படலாம்.

ஆனால், நீண்ட கால முதலீட்டாளர்கள், பங்காதாயத்தை விரும்புபவர்கள். இவர்கள், மிகத் தரமான நிறுவனத்தின் பங்குகளிலேயே முதலீடு செய்வார்கள். ஒரு நீண்ட காலத் திட்டத்திற்காகவோ அல்லது வரியைத் தவிர்ப்பதற்காகவோ இவர்கள் முதலீடு செய்யலாம்.இவர்கள் ஒரு நிறுவனத்தின் நிலையை, அதன் தன்மையை அடிப்படை ஆய்வு செய்து (Fundamental Analysis) அதன் பின்னரே முதலீடு செய்வர். பொதுவாக இவர்கள் சந்தையின் ஊசலாட்டத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் நோக்குடன் முதலீடு செய்வதில்லை. வருடாவருடம் கிடைக்கும் பங்காதாயம் (Dividend), குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஏறியிருக்கக் கூடிய பங்குகளின் விலையால் ஏற்படும் லாபம் இவற்றை மனதில் கொண்டே, பொதுவாக நீண்ட கால முதலீடுகள் செய்யப்படுகின்றன.

பங்கு வர்த்தகர்கள், பொதுவாக ஒரு நாளின்போது, சந்தையில் ஏற்படும் மாறுபாட்டினைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள். ஒரே நாளில் பலமுறை, பங்குகளை வாங்கியும் விற்பனை செய்தும் வணிகம் செய்வதை 'நாள் வணிகம்' (Day Trading) என்பர். இவர்கள் பங்குகளின் விலை ஏறுமா, சரியுமா என்பதை நுணுக்க ஆய்வு (Technical Analysis) செய்து அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்கின்றனர். இன்ன காரணங்களால், இந்தவகைப் பங்குகளில் விலை ஏறும் வாய்ப்புண்டு எனக் கணித்து, சிலர் பங்குகளை வாங்கி மிகக் குறுகிய காலத்தில் ( நான்கு ஐந்து நாட்களில்) விற்று லாபம் பார்ப்பர். இத்தகைய வர்த்தகர்களை உந்து / திணிவுப்பங்கு (Momuntum Shares) வர்த்தகர்கள் என அழைப்பதுண்டு. (எ.கா- இந்த நிறுவனம் ஒரு புதிய திட்டப்பணியில் (Project) ஈடுபடவுள்ளது எனவோ, ஒரு பெரிய நிறுவனத்திடம் கூட்டு வாணிபம் செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது எனவோ (Tie-up), பிற சிறிய நிறுவனங்களை வாங்கி, வணிகத்தை விரிவு படுத்தப் போகிறது என்றோ, (Take Over), குறைந்த பட்சமாக, மிகுந்த லாபமீட்டியுள்ளது, நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்பொழுது பங்குகளின் விலையும் உயரும் என்று கணித்தோ ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவர். அச்செய்தி வெளிவந்தவுடன், அவர்கள் எதிர்பார்ப்பின்படி விலை உயரும். தம்மிடம் உள்ள பங்குகளை அதிக விலைக்கு விற்று Profit Booking செய்துவிடுவர்.

 

இவை எல்லாமே 'வாங்கு-விற்பனை செய்' என்ற அடிப்படையில் இயங்குவன. அதாவது குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தல் என்ற விதியின் படி இயங்குவன ( Buy Low; Sell High). இது Long Trading என வழங்கப்படுகிறது.


இதற்கு எதிரான தத்துவம் 'முதலில் விற்பனை, பிறகு வாங்குதல்' ஆகும். முதலில் அதிக விலையில் விற்பனை செய்துவிட்டு பின், விலை சரிந்தவுடன் விற்ற அளவுக்கான பங்குகளை வாங்கி சமன்படுத்தல் (Adjust) Short Trading எனப்படும். அதாவது (Sell High; Buy Low)
என்ற கொள்கை செயல்படுத்தப்படுகிறது. அனேகமாக, பங்குச்சந்தையானது சரியும் என எதிர்பார்க்கப்படும்பொழுது, (கரடிச் சந்தைப் போக்கின் பொழுது) பங்குகளை முதலில் அதிக விலைக்கு விற்றுவிட்டு (கையில் இல்லாத பங்குகளை), விலை சரிந்தவுடன் அன்றைய தினத்துக்குள்ளேயே குறைந்த விலைக்கு வாங்குவதையே Short Trading / Short selling என்று அழைக்கிறோம்.


பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் காண்பது அத்தனை எளிதானது அல்ல. எந்தப்பங்குகளை வாங்கவேண்டும்? எப்பொழுது வாங்கவேண்டும்? எப்பொழுது விற்கவேண்டும் என்பதைச் சரிவர அறியாமல், கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்வது சூதாட்டத்தில் ஈடுபடுவதைப் போன்றதுதான். நிறுவனத்தின் நிலைமை, அதன் பொருளாதார திடத்தன்மை (Financial Stability), நாட்டின் நிலை, சந்தையின் தன்மை முதலிய பலவற்றைப் பற்றியும் அறிந்துதான் பங்கு வணிகத்தில் ஈடுபடவேண்டும். அப்படி இருந்துமே, சில சமயம் நட்டமடைய நேரிடலாம். எனினும், சந்தை குறித்த கூரிய அறிவும், அதன் போக்கினை ஊகிக்கும் திறனும், வேகமாக முடிவெடுத்து (முதலீடு செய்வதா, விற்றுவிட்டு வெளியில் வந்து விடுவதா ) செயலாற்றும் ஆற்றலும் உள்ளவர்கள் பொதுவாக எத்தகைய சந்தையிலும் எதிர்நீச்சல் போட்டுவிடுவார்கள். ஆனால் பெரும்பான்மையான மக்கள் சந்தையின் சுழற்சியில் சிக்குண்டு தவிப்பவர்களே. பலரது நட்டமே, ஒருவரது லாபமாக மாறுகிறது. இதுவே பங்குச்சந்தையின் தத்துவம். பங்குச் சந்தையில் பொதுவாக வெற்றி-தோல்வி(Win-Lose),தோல்வி-வெற்றி (Lose-Win) இவற்றுக்கான வாய்ப்புண்டே தவிர, வெற்றி-வெற்றி (Win-Win) என்ற சூழலுக்கான வாய்ப்பு இல்லை.

மேற்கூறியவை எல்லாம் பங்குச் சந்தையில் ஈடுபட விரும்புபவரை பயமுறுத்துவதற்காக அன்று. 'ஆழமறியாமல் காலை விடாதே' என்ற பழமொழியை நினைவு படுத்தத்தான். எனவே பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபடுமுன், அது குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
கி. பாலகார்த்திகா

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2009 12:03 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
eelanation க்கு நன்றி !
2 செவ்வாய்க்கிழமை, 08 செப்டம்பர் 2009 07:41
வசந்த்
ஈநேசனுக்கு நன்றி சொல்லவேண்டும் ஏனென்றால், சிறந்த பத்திரிகையாகவும் பல வணிகவியலாளர்களையும், அறிவியலளார்களையும் திறம்பட இனம்கண்டு இவ்விடத்தில் பலருக்கும் எல்லாவிதமான செய்தியும், விசயங்கலையும் தெரிந்துகொள்ளும் வகையிலும் அமைத்துதந்தற்கு..நண்றி...எத்தொனையோ செய்திதாள் படித்து இருக்கிறேன் ஆனால் இதைபோலில்லை...
VILAKATIKU
1 திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2009 04:18
NIRUBAN
VILANKA PADUTINATUKU NANTRI

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை