Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
stock-marketஉலகில் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் வெற்றியாளராகத் திகழும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்குக் கூறும் சில அறிவுரைகள் - நமது ஈழநேசன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தரப்படுகிறது. (நன்றி - பல இணைத்தளங்கள்)

இதைப் படிப்பதற்கு முன்னால், உங்களுக்கு உண்மையிலேயே பங்குச்சந்தையில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளதா? நீங்கள் முதலீட்டாளராக (investor)விரும்புகிறீர்களா அல்லது ஊகத்திறனைப் பயன்படுத்தி, பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்க விரும்புபவரா (Speculator) என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இரண்டும் வேறுவேறானவை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது என்பது ஒரு கலை. சில விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய விளையாட்டு. ஆனால், speculation என்பது கிட்டத்தட்ட சூதாட்டம். சரி, தவறு, இப்படித்தான் செய்யவேண்டும் என்றெல்லாம் அதில் இல்லை. உங்களுக்கு யூகிக்கின்ற திறனும் இருந்து, அதிர்ஷ்டக் காற்றுமிருந்தால் லாபம் கொட்ட வாய்ப்புண்டு.

இப்பொழுது வாரன் பஃபெட் என்ன சொல்கிறார் என்று கேட்போமா?

முதலீட்டாளர்களுக்குக் கூறும் முதல் அறிவுரை 'உங்களுக்குப் புரியாத எந்தத் தொழிலிலும் முதலீடு செய்யாதீர்கள்' என்பதுதான். ஒரு தொழில் குறி
த்த அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே, அதனைப் புரிந்துகொண்டு, இறங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும். குருட்டாம்போக்கில் முதலீடு செய்தால் பலனும் அதற்கேற்றாற்போல்தான் இருக்கும் என்பதுதான் இந்த அறிவுரையின் சாரம்.

இரண்டு: பொதுவாக எல்லோரும் கூறும் அறிவுரை 'அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே!' என்பதுதான். ஆனால் வாரன் பஃபெட், இதில் மாறுபடுகிறார். 'சில குறிப்பிட்ட வகை பிடிமானங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தன்னால் இழப்பு ஏற்படும் அபாயம் குறையும். முதலீட்டாளர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல், பங்கு வர்த்தகத்தில் இறங்கினால் மட்டுமே, இத்தகைய Diversification அதாவது பலவகையான பங்குகளில் பணத்தைப் பிரித்துபோடுதல் அவசியம் என்பது அவர் கருத்து.

பொதுவாகப் பங்குகளை வாங்குகையில், தற்போதைய லாபத்தை மட்டும் பார்க்காமல், பொதுவாக அந்த நிறுவனங்களின் லாபம் ஈட்டும் தன்மை, கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி லாபம் இவற்றையும், அந்த நிறுவனங்களுடைய கூட்டு நிறுவனங்கள், அந்த நிறுவனங்களின் பெயரில் வணிகம் புரிய உரிமம் பெற்றவர்கள் இவற்றைக் குறித்த முழு விவரங்களையும் அறிந்துகொண்டு செயல்புரிவது நல்லது என்பது அவரது அடுத்த அறிவுரை. அத்துடன், முதலீட்டு முடிவுகளின் பொழுது, ஒரு நிறுவனத்தின் பங்குகளுக்கும் அவர்களது ஆதாயத்திற்கும் உள்ள விகிதத்திற்கும் (Return on Equity) முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமே அல்லாமல், பங்குகளின் மீதான வருமானத்தைக் (Earning per share) கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கருதுகிறார்.

'மற்றவர்கள் உங்களுடன் ஒத்துப்போகிறார்களா இல்லையா என்பதை வைத்து உங்கள் முதலீடு சரியா தவறா என்று தீர்மானிக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் விவரங்கள், நீங்கள் முதலீடு செய்ததற்கான காரணங்கள் இவற்றை வைத்தே உங்கள் முடிவு சரி அல்லது தவறாகலாம். பிறர் அபிப்பிராயத்தால் அல்ல' என்று கூறும் அவர் மற்றவர்களுடன் ஒத்துப்போகாமல் இருப்பதே பலனளிக்கும் என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். 'மற்றவர்கள் எல்லாம் முதலீடு செய்ய அஞ்சுகையில் நீங்கள் துணிந்து முதலீடு செய்யுங்கள். மற்றவர்கள் துணிந்து முதலீடு செய்கையில் நீங்கள் விற்பனை செய்யுங்கள்.' என்பது அவர் காட்டும் வழி.

அது மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கு இருக்கவேண்டிய மனநிலை, குண நலன்கள் பற்றி அவர் கூறுவதைப் பார்ப்போமா?

1. உங்கள் முதலீட்டின் மதிப்பு ஐம்பது சதவீதத்திற்கும் கீழ் சரிகையில் கூட பீதியடையாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது என்றால் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் இறங்கவே லாயக்கில்லை.
2. எதிலும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வாழ்க்கைக்கு நல்லது. ஆனால் பங்குவர்த்தகத்தில் அது உங்கள் எதிரி.
3. பங்கு வர்த்தகத்தில் சில கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வருகையில் அவற்றை ஒதுக்கும் மனவலிமையே ஒரு முதலீட்டாளருக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது.
4. பெரும்பாலான முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக வாங்கி, விற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாததாலேயே நட்டத்தை அடைகிறார்கள். பெரும்பான்மையான லாபம், பங்குச்சந்தையில் செயல்படாதபொழுதுதான் கிடைக்கிறது. (அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, குறிப்பிட்ட காலம் வரை இருக்கட்டும் என்று முதலீடு செய்கிறீர்கள். நடுவில், சில காரணங்களுக்காக அவற்றை விற்பது, அதன் விலை மாறுபாட்டில் பயந்துகொண்டு விற்றுவிட்டு வேறொன்றில் முதலீடு செய்வது இவை, சரியான முறையில் கணக்கிடாவிடில் நட்டத்தைத் தூண்டிவிடும். பொறுத்தார் பூமியாள்வார் என்ற தமிழ்ப்பழமொழியையே வாரன் பஃபெட் தனது பாணியில் சொல்கிறார்.
5. கொஞ்சம் அசட்டை, மந்தமாக இருத்தல் இவை கூட முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக்குணங்கள் என்பது இவர் கருத்து. ஏனெனில், முதலீட்டாளர்கள் 'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்' காத்திருக்கும் கொக்குப்போல் இருக்க வேண்டியவர்கள். மிகவும் பரபரப்பாகச் செயல்படுவது, எதிர்பாராத நட்டங்களை உண்டாக்கலாம்.
6. கன்னாபின்னாவென்ற ஊசலாட்டங்கள், அதில் முதலீடு செய்பவர்களின் தாக்கத்தாலேயே உண்டாகின்றன, அந்தந்த நிறுவனங்களின் லாபநட்டங்களால் அல்ல. எனவே அவற்றைக் கண்டு குழம்பவேண்டுவதில்லை.
7. ஒரு முதலீட்டாளர் எல்லா முடிவுகளையும் சரியாகச் செய்யவேண்டுமென்பதில்லை. பெரும் தவறான முடிவுகளைச் செய்யாமல் இருந்தால் போதுமானது.
8. ஒரு முதலீட்டைச் செய்கையில், அந்த வாணிபத்தையே விலைக்கு வாங்குவது போல் நினைத்து முதலீடு செய்யுங்கள். பங்குகளை குத்தகைக்கு எடுப்பதுபோல் நினைக்காதீர்கள். (முழு ஈடுபாட்டுடன் அந்த நிறுவனத்தைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்)

இவையெல்லாம் பொதுவாக நாம் கேட்கும், படிக்கும் பங்குச்சந்தை குறித்த ஆலோசனைகளுக்கு முரணாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் இவை பங்குச்சந்தையில் மேதையான ஒருவரின் கருத்து. சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால்.... வெற்றி உங்கள் பக்கம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 23:01 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
detail of A toZ
2 வெள்ளிக்கிழமை, 09 டிசம்பர் 2011 22:08
jayakumar
know about share market detail of A toZ
SPECULATION
1 செவ்வாய்க்கிழமை, 08 மார்ச் 2011 22:11
sathish
hi
all speculator are not gamblers.if you use techinical analist you can make money in consistant bacis.but if you have low financial intelligence your returs will be low.if your financial intelligence high you can make high return

most people are investors even warren buffettvis an investor..most people make a mistake they apply the the investment rules for trading.lowest level of financial competence also can make consistent annual return of 10% how? just buy s&p 500 index (holding period 5 years or more better)

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

detail of A toZ பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
SPECULATION பங்கு வர்த்தகம் - வாரன் பஃபெட் கூறும் வழிமுறைகள்
about broking office பங்குச் சந்தையின் வகைகள்
பஙுசந்தை பங்குச் சந்தையின் வகைகள்
basic about thepanku santhai பங்குச் சந்தையின் வகைகள்
use ful பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்குச் சந்தையில் முதலீடு சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
best stock brockers company பங்குச் சந்தையின் வகைகள்
Stock Market-How to win? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி? பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை