அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் பொறியியலாளர்களும் இணைந்து, எதிர்காலத்தில் கணனிகளின் வேகத்தை அதிகரிக்கவல்ல புதியவகை நினைவகம் ஒன்றைக் உருவாக்கியுள்ளனர்.
கலிபோனியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்றினால், தற்போது பயன்பாட்டிலுள்ள நினைவகங்களின் சிறப்பம்சங்களை ஒருங்கிணைத்தே இந்தப் புதியவகை நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன் இப்புதியவகை நினைவகம் தற்போது பரிசோதனை நிலையிலேயே இருக்கின்றது.
தற்போது கணனிகளில் நிலையற்ற (volatile) மற்றும் நிலையான (non-volatile) என இருவகையான நினைவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விருவகையான நினைவகங்களும் தேவைகளுக்கேற்ப கணனிகளில் பயன்படுத்தப் படுபகின்றன.
நிலையற்ற (volatile) தொழிநுட்பத்திலமைந்த நினைவகங்கள் (RAM/DRAM Memories) கணனிகளின் இயங்குநிலையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது கணனிகள் இயங்குநிலையில் இருக்கும்போது, தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைத்து அத்தரவுகளை வேகமாகப் பரிமாறுவதற்காக இவ்வகை நினைவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை நினைவகங்களில் தரவுகள் சேமிக்கப்படுவதற்கு, நினைவகங்களுக்கான தொடர்ச்சியான மின்வழங்கல் அவசியம்.
நிலையான நினைவகங்கள் (non-volatile) தரவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. USB Drive, MP3 Player போன்றவற்றில் இவ்வகையான நினைவகங்களே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகையான நினைவகங்களுக்கு தரவுகளைச் சேமித்து வைப்பதற்காக தொடர்ச்சியான மின்வழங்கல் அவசியமற்றது.
தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நினைவகமானது DRAM நினைவகங்கள் போன்று வேகமாகச் செயற்பட வல்லதாகவும் தரவுகளை நிரந்தரமாகச் சேமிக்கவல்லதாகவும் காணப்படுகின்றது.
இதன்காரணமாக, கணனிகள் ஆரம்பிப்பதற்குத் தேவையான தரவுகளை (bootup information) இவ்வகை நினைவகங்களில் பதிந்துவைப்பதன் மூலம் கணனிகளை வேகமாக இயக்கமுடியும். அதுமட்டுமன்றி, இணைய மற்றும் வலையமைப்பு சேவை வழங்கிகளை (web and network servers) பயன்பாடு இல்லாத நேரத்தில் தன்னியக்கமாக நிறுத்தி சேவைகளுக்கான வேண்டுகோள் (service request) கிடைக்கும் நேரத்தில் அவற்றின் இயக்கத்தை வேகமாகத் தொடக்கி வேண்டிய தரவுகளை உடனடியாக வழங்க முடியும்.
மேலதிக தரவுகள்







கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















